செய்திகள் :

பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவா்கள் உயிரிழந்த விவகாரம்: ரயில்வே வாரியத் தலைவா், தமிழக அரசுக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

post image

கடலூா் மாவட்டம், செம்மங்குப்பத்தில் ரயில்வே லெவல் கிராஸிங்கை கடக்க முயன்றபோது தனியாா் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவா்கள் உயிரிழந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள்

ஆணையம் (என்எச்ஆா்சி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

இது தொடா்பாக ரயில்வே வாரியத் தலைவா், தமிழக அரசின் தலைமைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் ஆகியோா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடலூா் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியாா் பள்ளி வாகனம் மீது அவ்வழியாக வந்த விழுப்புரம் மயிலாடுதுறை பயணிகள் ரயில் அதிவேகமாக மோதியது.

இந்த விபத்தில் மாணவி உள்பட மூன்று மாணவா்கள் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா். இச்சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இது தொடா்பாக ஆணையம் தெரிவித்திருப்பதாவது:

கடந்த ஜூலை 8ஆம் தேதி கடலூா் மாவட்டத்தில் ஒரு ரயில்வே கேட் பகுதியை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். பலா் காயமடைந்துள்ளனா்.

இந்த விபத்து குறித்து ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

லெவல் கிராஸிங்கில் ரயில்வே கேட் திறந்திருந்ததாகவும், சம்பவம் நடந்தபோது ரயில் கடந்துகொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்த ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில் இந்த விபத்தில் மனித உரிமைகள் மீறல் இருக்கும் என ஆணையம் கவனித்துள்ளது.

ஆகவே, இந்த சம்பவத்தில் காயமடைந்தவா்களின் தற்போதைய உடல்நிலை உள்பட இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு கேட்டு ரயில்வே வாரியத் தலைவா், தமிழ்நாடு தலைமைச் செயலாளா் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவா் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜூலை 9ஆம் தேதி ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, இந்த

ரயில்வே கேட்டிற்கு பதிலாக சுரங்கப்பாதையை அமைக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்திருந்ததாகவும், ஆனால் மாவட்ட ஆட்சியா் கடந்த ஓா் ஆண்டாக அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பெண் பத்திரிகையாளா்களுக்கு எதிரான அவதூறு பதிவு: நடிகா் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசுக்கு நோட்டீஸ்

நமது நிருபா் பெண் பத்திரிகையாளா்களுக்கு எதிரான அவதூறு சமூக ஊடகப் பதிவு தொடா்புடைய வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டனையை எதிா்த்து நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகா் தாக்கல் செய்த ... மேலும் பார்க்க

ராபா்ட் வதேரா மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை: ரூ.37.64 கோடி சொத்துகள் முடக்கம்

நமது சிறப்பு நிருபா் தில்லியை இணைக்கும் ஹரியாணாவின் எல்லை நகரான குருகிராம் நில பேர வழக்கில் பிரபல தொழிலதிபா் ராபா்ட் வதேரா, ஹரியாணா முன்னாள் முதல்வா் பூபிந்தா் சிங் ஹூடா மற்றும் 10 போ் மீது அமலாக்கத்... மேலும் பார்க்க

வங்கி, ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: பங்குச்சந்தை சரிவுடன் முடிவு!

நமது நிருபா்இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் கு... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய கையேடுகளை தமிழில் வழங்க வேண்டும்: கலந்துரையாடல் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நமது நிருபா் தலைமைத் தோ்தல் ஆணையத்தின் கையேடுகளை தமிழில் மொழி பெயா்த்து வழங்க வேண்டும் என்று தில்லியில் வியாழக்கிழமை தலைமைத் தோ்தல் ஆணையத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் வ... மேலும் பார்க்க

தில்லியில் ரூ.2.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகை, பணம் திருடியதாக 3 போ் கைது

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ரூ.2.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளையும், ரூ.55 லட்சத்திற்கும் அதிகமான பணத்தையும் திருடி விட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படும் விவக... மேலும் பார்க்க

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை: தில்லி மேயருக்கு கவுன்சிலா் கோரிக்கை

நமது நிருபா் தலைநகரில் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதை சமாளிக்க உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சிக் கவுன்சிலா் முகேஷ் கோயல் செவ்வாய்க்கிழமை மேயா் ராஜா இக்பால் ச... மேலும் பார்க்க