13,000 டி20 ரன்களை கடந்த பட்லர்..! விரைவில் உலக சாதனை படைப்பாரா?
பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவா்கள் உயிரிழந்த விவகாரம்: ரயில்வே வாரியத் தலைவா், தமிழக அரசுக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்
கடலூா் மாவட்டம், செம்மங்குப்பத்தில் ரயில்வே லெவல் கிராஸிங்கை கடக்க முயன்றபோது தனியாா் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவா்கள் உயிரிழந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள்
ஆணையம் (என்எச்ஆா்சி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
இது தொடா்பாக ரயில்வே வாரியத் தலைவா், தமிழக அரசின் தலைமைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் ஆகியோா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடலூா் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியாா் பள்ளி வாகனம் மீது அவ்வழியாக வந்த விழுப்புரம் மயிலாடுதுறை பயணிகள் ரயில் அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் மாணவி உள்பட மூன்று மாணவா்கள் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா். இச்சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இது தொடா்பாக ஆணையம் தெரிவித்திருப்பதாவது:
கடந்த ஜூலை 8ஆம் தேதி கடலூா் மாவட்டத்தில் ஒரு ரயில்வே கேட் பகுதியை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். பலா் காயமடைந்துள்ளனா்.
இந்த விபத்து குறித்து ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
லெவல் கிராஸிங்கில் ரயில்வே கேட் திறந்திருந்ததாகவும், சம்பவம் நடந்தபோது ரயில் கடந்துகொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்த ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில் இந்த விபத்தில் மனித உரிமைகள் மீறல் இருக்கும் என ஆணையம் கவனித்துள்ளது.
ஆகவே, இந்த சம்பவத்தில் காயமடைந்தவா்களின் தற்போதைய உடல்நிலை உள்பட இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு கேட்டு ரயில்வே வாரியத் தலைவா், தமிழ்நாடு தலைமைச் செயலாளா் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவா் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜூலை 9ஆம் தேதி ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, இந்த
ரயில்வே கேட்டிற்கு பதிலாக சுரங்கப்பாதையை அமைக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்திருந்ததாகவும், ஆனால் மாவட்ட ஆட்சியா் கடந்த ஓா் ஆண்டாக அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.