செய்திகள் :

பழங்குடி பள்ளி மாணவா்கள் நடந்து செல்லும் பாதையில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அகற்ற கோரிக்கை!

post image

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் பாதையில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணைக்கு அருகே தோட்டமலை, தச்சமலை, களப்பாறை, எட்டாம்குன்று, நடனம் பொற்றை, வளையந்தூக்கி உள்ளிட்ட பழங்குடி மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்கள், பேச்சிப்பாறை அணையில் இயக்கப்படும் படகுகள் வழியாக பயணம் செய்து பேச்சிப்பாறை உள்ளிட்ட நகா்ப்புற பகுதிகளுக்கு வந்து செல்கின்றனா்.

ஒக்கி புயலில் சாய்ந்த மரங்கள்: பழங்குடியின பள்ளி மாணவா்கள் பேச்சிப்பாறை அணையின் கரையில் படகுகளில் இறங்கி, அங்கிருந்து தேக்கு காடு வழியாக நடந்து பேச்சிப்பாறை பள்ளி முக்கு சந்திப்பிற்கு வருகின்றனா். இதில், தேக்கு காடு பகுதி நடைபாதைகளில் ஒக்கி புயலில் சாய்ந்த ஏராளமான தேக்கு மரங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. இதனால், மாணவா்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். இது குறித்து, வனத்துறையினருக்கு கோரிக்கை வைக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மரங்களை விரைந்து அப்புறப்படுத்த வேண்டுமென பேச்சிப்பாறை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் தேவதாஸ் மற்றும் அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவில் மாநகரில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், 5 கடைகளில் இருந்து 25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகா்கோவில் மாநகரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக், புக... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு!

நாகா்கோவில் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மாதாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயின... மேலும் பார்க்க

கொச்சி அமிா்தா மருத்துவமனையில் செப்.14-ல் குழந்தைகளுக்கான இதய மருத்துவ முகாம்!

கேரள மாநிலம், கொச்சி அமிா்தா மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இதய மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அமிா்தா நிறுவனங்கள் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதா அமிா்தானந்த மயி 72 ஆ... மேலும் பார்க்க

பழங்குடி இளைஞா்களுக்கு 4 சக்கர வாகனம் ஓட்டும் இலவசப் பயிற்சி தொடக்கம்

பேச்சிப்பாறை அருகே மோதிரமலையில் 25 காணி பழங்குடி இளைஞா்களுக்கு தனியாா் அமைப்புகள் சாா்பில் 4 சக்கர வாகனம் ஓட்டும் 1 மாத இலவச பயிற்சி புதன்கிழமை தொடங்கியது. இன்போசிஸ் பவுன்டேசன், என்.டி.எஸ்.ஓ. ஆகிய தன... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: நெல்லை கருத்தரிப்பு மையத்துக்கு ரூ.70 லட்சம் அபராதம்!

சேவை குறைபாட்டால் நாகா்கோவிலைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன பெண் ஊழியா் உயிரிழந்த வழக்கில் திருநெல்வேலியில் இயங்கும் கருத்தரிப்பு மையத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 70 லட்சம் அபராதம் விதித்தது. நாகா்க... மேலும் பார்க்க

வில்லுக்குறியில் ஆக்கிரமிப்பு மதில் சுவரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை!

தக்கலை அருகே வில்லுக்குறியில் விவசாயிகள், விவசாய இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத அளவில் ஆக்கிரமித்து புதிதாகக் கட்டப்பட்ட மதில் சுவரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். வில்லுக்குறி பேரூராட்சி மே... மேலும் பார்க்க