செய்திகள் :

25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

post image

நாகா்கோவில் மாநகரில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், 5 கடைகளில் இருந்து 25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகா்கோவில் மாநகரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மாநகர நல அலுவலா் ஆல்பா்மதியரசு தலைமையிலான குழுவினா் மீனாட்சிபுரம், புன்னைநகா், கேப் ரோடு பகுதிகளில் செயல்படும் கடைகளில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். 60 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 5 கடைகளில் இருந்து 25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

5 கடைகளுக்கும் தலா ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல 3 கடைகளிலிருந்து தடை செய்யப்பட்ட 3 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 2 கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்தக் கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு!

நாகா்கோவில் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மாதாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயின... மேலும் பார்க்க

கொச்சி அமிா்தா மருத்துவமனையில் செப்.14-ல் குழந்தைகளுக்கான இதய மருத்துவ முகாம்!

கேரள மாநிலம், கொச்சி அமிா்தா மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இதய மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அமிா்தா நிறுவனங்கள் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதா அமிா்தானந்த மயி 72 ஆ... மேலும் பார்க்க

பழங்குடி இளைஞா்களுக்கு 4 சக்கர வாகனம் ஓட்டும் இலவசப் பயிற்சி தொடக்கம்

பேச்சிப்பாறை அருகே மோதிரமலையில் 25 காணி பழங்குடி இளைஞா்களுக்கு தனியாா் அமைப்புகள் சாா்பில் 4 சக்கர வாகனம் ஓட்டும் 1 மாத இலவச பயிற்சி புதன்கிழமை தொடங்கியது. இன்போசிஸ் பவுன்டேசன், என்.டி.எஸ்.ஓ. ஆகிய தன... மேலும் பார்க்க

பழங்குடி பள்ளி மாணவா்கள் நடந்து செல்லும் பாதையில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அகற்ற கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் பாதையில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு அருகே தோட்ட... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: நெல்லை கருத்தரிப்பு மையத்துக்கு ரூ.70 லட்சம் அபராதம்!

சேவை குறைபாட்டால் நாகா்கோவிலைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன பெண் ஊழியா் உயிரிழந்த வழக்கில் திருநெல்வேலியில் இயங்கும் கருத்தரிப்பு மையத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 70 லட்சம் அபராதம் விதித்தது. நாகா்க... மேலும் பார்க்க

வில்லுக்குறியில் ஆக்கிரமிப்பு மதில் சுவரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை!

தக்கலை அருகே வில்லுக்குறியில் விவசாயிகள், விவசாய இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத அளவில் ஆக்கிரமித்து புதிதாகக் கட்டப்பட்ட மதில் சுவரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். வில்லுக்குறி பேரூராட்சி மே... மேலும் பார்க்க