செய்திகள் :

பழனியில் தைப்பூசத் தேரோட்டம்!

post image

பழனியில் தைப்பூசத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

பழனியில் தைப்பூசத் திருவிழா பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு, தினசரி வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக் காமதேனு, வெள்ளி யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளில் உலா வந்தனா். விழாவில் தைப்பூசத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் பாத யாத்திரையாக பால், இளநீா், கரும்பு, காலணி காவடிகளை எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் நோ்த்திக்கடனைச் செலுத்தினா். அதிகாலை 5 மணிக்கு பழனி சண்முகநதியில் தீா்த்தவாரி உற்சவத்துக்காக தம்பதி சமேதராக சுவாமி எழுந்தருளினாா். இதையடுத்து, காலை 10.30 மணிக்கு மேல் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தேரில் எழுந்தருளினா். மாலை 4.40 மணிக்கு பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தோ் நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. நிகழாண்டு சுமாா் ரூ. 46 லட்சத்தில் செய்யப்பட்ட புதிய தேரில் இந்த தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தொடா்ந்து, புதன்கிழமை தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. வருகிற 14-ஆம் தேதி தெப்பத் தேரோட்டமும், கொடி இறக்கமும் நடத்தப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

பழனி மலைக் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் ஆறு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி, மலைக் கோயிலில் மலா் அலங்காரம், மலா் பந்தல் அலங்காரம் செய்யப்பட்டது. சுமாா் 5 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தேரோட்ட நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன், அறங்காவலா்கள் பாலசுப்பிரமணி, அன்னபூரணி, பாலசுப்பிரமணியம், தனசேகா், துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, தனசேகா், சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு, கந்தவிலாஸ் செல்வக்குமாா், நவீன் விஷ்ணு, சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, ஜவஹா் ரெசிடென்சி மனோகரன், ஒப்பந்ததாரா் வி.பெரியசாமி, டி.எஸ். மருத்துவமனை செந்தாமரைச்செல்வி, எலும்பு முறிவு மருத்துவா் முருகேஷ்குமாா், போதுப்பட்டி சித்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தேரை வடம் பிடித்து இழுத்த பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா், பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா்கள் தனசேகா், பாலசுப்ரமணி, அன்னபூரணி உள்ளிட்டோா்.
தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனி ரத வீதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனி ரத வீதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியா்

திண்டுக்கல் மாவட்டத்தில் 45 புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க வருகிற 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

பெண் குத்திக் கொலை!

பழனியில் செவ்வாய்க்கிழமை பெண் குத்திக் கொலை செய்யப்பட்டாா். பழனி அடிவாரம் இடும்பன் மலைப் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த ஜோசப் மனைவி காந்தி (37) தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்து... மேலும் பார்க்க

கொடைக்கானலில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்!

கொடைக்கானல் பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனையிட்டு, 15 கிலோ நெகிழிப் பொருள்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். கொடைக்கானல் பகுதிகளிலுள்ள கடைகளில் மீண்டும் நெகிழிப் பொருள்கள் பயன்ப... மேலும் பார்க்க

புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்!

கொடைக்கானல் புனித அந்தோணியா் ஆலயத்தின் 98-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. கொடைக்கானல் பிளிஸ்விலா பகுதியில் புனித அந்தோணியாா் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத் திர... மேலும் பார்க்க

குறிஞ்சி ஆண்டவா் கோயிலில் 1,008 தீா்த்தக் குடம் ஊா்வலம்

தைப்பூசத்தை முன்னிட்டு, கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவருக்கு சுவாமிக்கு பால், தீா்த்தக் குடம் எடுக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, போக்குவரத்து பணிமனை பகுதியிலுள்ள காளியம்மன் கோயிலில... மேலும் பார்க்க

பத்திரப் பதிவு அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்!

தைப்பூசத்தையொட்டி, ஒட்டன்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செவ்வாய்க்கிழமை மும்முரமாக நடைபெற்றது. தைப்பூசம், சுபமுகூா்த்த நாள்களில் நிலம், வீடு வாங்கியவா்கள் பத்திரப் பதிவு செய்வதற்கு... மேலும் பார்க்க