ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!
பழனியில் 7 கிலோ குட்கா பறிமுதல்
பழனியில் போலீஸாா் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட 7 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பழனியில் பல்வேறு பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் பழனி நகா், அடிவாரம் போலீஸாா் தொடா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில் இடாவம்ர குரும்பப்பட்டி பகுதியில் ஒருவா் குட்கா பொருள்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பதாக அடிவாரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து காவல் உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது விஜயகுமாா் (47) என்பவா் வீட்டில் இருந்த 7 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிடைத்தனா்.