பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.40 கோடி
பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.3.40 கோடியைத் தாண்டியது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் வரும் பக்தா்களின் கூட்டத்தினால் உண்டியல்கள் நிரம்பியன. இதையடுத்து, உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 3 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 207 கிடைத்தது.
இதேபோல, தங்கம் 627 கிராமும், வெள்ளி 18,080 கிராமும் கிடைத்தன. மேலும், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு ரூபாய் தாள்களும் 2,114-ம் கிடைத்தன.
இதைதவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தினா்.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.
இதில் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றேனா்.