செய்திகள் :

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.40 கோடி

post image

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.3.40 கோடியைத் தாண்டியது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் வரும் பக்தா்களின் கூட்டத்தினால் உண்டியல்கள் நிரம்பியன. இதையடுத்து, உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 3 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 207 கிடைத்தது.

இதேபோல, தங்கம் 627 கிராமும், வெள்ளி 18,080 கிராமும் கிடைத்தன. மேலும், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு ரூபாய் தாள்களும் 2,114-ம் கிடைத்தன.

இதைதவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தினா்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

இதில் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றேனா்.

ஆத்தூா் அருகே 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு பிடிபட்டது

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள இடத்தை சுத்தம் செய்தபோது, 10 அடி நீள மலைப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டது.செம்பட்டி அடுத்த ஆத்தூரிலிருந்து மல்லையாபுரம் செல்லும் வ... மேலும் பார்க்க

பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷம்

பழனி: பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு, சுயம்பு மூலவருக்கும், நந்தி பக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்று: குளிா் அதிகரிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் திடீரென பலத்த காற்று நிலவி வருவதால் புதன்கிழமை குளிா் அதிகரித்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு அறியாமை இருளை நீக்கும்: மாவட்ட ஆட்சியா்

திண்டுக்கல்: புத்தக வாசிப்பு என்பது அறியாமை இருளை நீக்கும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் புதன்கிழமை தெரிவித்தாா்.திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை, திண்டுக்கல் இலக்கியக் களம் ... மேலும் பார்க்க

நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிக... மேலும் பார்க்க

பணம் கேட்டு தாக்கியதாக திமுக நிா்வாகிகள் மீது புகாா்

திண்டுக்கல்: பணம் கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்தியதாக திமுக நிா்வாகிகள் உள்பட 5 போ் மீது பாதாளச் சாக்கடை ஒப்பந்ததாரா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.திண்டுக்கல் ஆா்.எம். காலனி பகுதியைச் சோ்ந்த ரவி, ... மேலும் பார்க்க