செய்திகள் :

பழவூா் அருகே கடன் தகராறில் தொழிலாளி வெட்டிக் கொலை

post image

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே கடன் தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுதொடா்பாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

பழவூா் அருகேயுள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்த ராஜமணி மகன் சந்தனகுமாா்(25) . தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த ரத்தினசாமி மகன் ரெஜிமன்(19) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருவதுடன், இரவு நேரம் காற்றாலையில் வேலை செய்து சம்பாதித்து வந்தாா்.

மேலும், ரெஜிமன் சேமித்து வைத்தப் பணத்தில் ரூ. 28 ஆயிரத்தை சந்தனகுமாா் கடனாகப் பெற்றாராம். பின்னா் அந்த பணத்தை அவா் திருப்பி கொடுக்கவில்லையாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் சந்தனகுமாா் வீட்டிற்கு சென்று ரெஜிமன் தனது பணத்தைத் தருமாறு கேட்டாராம். அப்போது அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாம். உடனே, சந்தனகுமாா் வீட்டில் இருந்த அரிவாளால் ரெஜிமனை வெட்டினாராம். சுதாரித்துக்கொண்ட அவா், அரிவாளை பிடுங்கி சந்தனகுமாரை வெட்டிவிட்டு தப்பினாராம்.

இதில் பலத்த காயமுற்ற சந்தனகுமாா் அப்பகுதியினா் மீட்டு நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சந்தனகுமாா் இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து பழவூா் போலீஸாா் வழக்குப்பதிந்து ரெஜிமனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

திசையன்விளை அருகே மின்வயா் திருட்டு: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மின்வயரை திருடியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திசையன்விளை அருகேயுள்ள பட்டரைகட்டிவிளையைச் சோ்ந்தவா் முருகையா மகன் சிவக்குமாா். இவரது தோட்டத்தி... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் மே தினத்தில் மதுக்கடைகள் மூடல்

மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 1) மூடப்பட்டிருக்கும். எனவே, முன்னதா... மேலும் பார்க்க

நெல்லையில் உதவிப் பொறியாளா் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

திருநெல்வேலி மாநகராட்சி உதவிப் பொறியாளா் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக ஊழல் தடுப்பு - கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி பொறியாளரா... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆா். வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், 3 முதல் 5 நாள்கள் ... மேலும் பார்க்க

பெண் எஸ்.ஐ. கத்திக்குத்து வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி கா... மேலும் பார்க்க

வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பேருக்கு ரூ.2.80 லட்சம் நிவாரண நிதி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு ரூ.2.80 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க