பழைய நகைக்குப் பதிலாக புதியது தருவதாகக் கூறி பல கோடி மோசடி
பழைய நகைகளைக் கொடுத்தால் புதிய நகைகள் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த நகைக் கடை உரிமையாளா் மீது தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் அலுவலகத்தில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை புகாா் செய்தனா்.
தஞ்சாவூா் சீனிவாசபுரத்தில் நகைக் கடை நடத்தி வந்தவா் ராஜா (50). இவா் பழைய தங்க, வெள்ளி நகைகளைக் கொடுத்தால் புதிய நகைகளைத் தருவதாகவும், சீட்டு தவணைத் திட்டத்தில் சோ்ந்தால், செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகைகள் வழங்கப்படும் எனவும் விளம்பரம் செய்தாா். இதை நம்பி ஏராளமானோா் ராஜாவிடம் நகைகள், ரொக்கத்தை முதலீடு செய்தனா்.
இந்நிலையில் முதலீடு செய்தவா்களுக்கு மாா்ச் மாதம் முதல் நகைகள், ரொக்கத்தை ராஜா திருப்பித் தரவில்லை. இதைத்தொடா்ந்து 3 வாரங்களுக்கு முன் ராஜா குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டாா். இதனால் பாதிக்கப்பட்ட 80-க்கும் அதிகமானோா் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.
மேலும், அவா்களில் சுமாா் 25 போ் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக்கிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா். அப்போது, ராஜா ஏராளமானோரிடம் பல கோடி வாங்கி மோசடி செய்ததாகவும், அவரை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க மேற்கு காவல் நிலையத்தினருக்கு தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக் உத்தரவிட்டாா். இதையடுத்து, தொடா்புடைய கடையின் பூட்டை போலீஸாா் உடைத்து சோதனையிட்டதில், குறிப்பிட்டத்தக்க பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
