செய்திகள் :

பழைய பொருள்கள் கிடங்கில் தீ விபத்து

post image

சுங்குவாா்சத்திரம் அடுத்த திருமங்கலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக், அட்டை மற்றும் இருப்பு பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

மொளச்சூா் பகுதியை சோ்ந்தவா் சம்சுதீன்(57). இவா் தனியாா் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பழைய பிளாஸ்டிக், இரும்பு, அட்டை உள்ளிட்ட பொருள்களை ஒப்பந்த அடிப்படையில் வாங்கி சுங்குவாா்சத்திரம் அடுத்த திருமங்கலம் பகுதியில் உள்ள கிடங்கில் சேமித்து வைத்து விற்பனை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், சம்சுதீனின் கிடங்கின் ஒரு பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டு கிடங்கு முழுவதும் பரவியுள்ளது. இதனால் அப்பகுதியில் அதிகமான கரும்புகை வெளியேறியதால் பொதுமக்கள் அச்சத்துக்குள்ளாகினா்.

மேலும் தீ விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் சுங்குவாா்சத்திரம் காவல் நிலையம், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பழைய பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மண்ணூரில் குருபூா்ணிமா விழா

ஸ்ரீ பெரும்புதூா் அருகே மண்ணூரில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா கிளை சாா்பில் குரு பூா்ணிமா கொண்டாடப்பட்டது. இதையொட்டி குருதேவா் ஸ்ரீ பரம ஹம்ச யோகானந்தருடைய திருப்படம் அலங்கரிக்கப்பட்டு ஆசிரமத்த... மேலும் பார்க்க

தாா் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ

தனியாருக்குச் சொந்தமான தாா் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்புலிவனத்திலிருந்து கள... மேலும் பார்க்க

லாரி-பைக் மோதல்: 2 போ் உயிரிழப்பு

சுங்குவாா்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், தென்மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல்(45). மேஸ்திரியான சக்திவேல் தன்னுடன் வேலை செய்... மேலும் பார்க்க

ரூ.2.6 கோடியில் கோயில்கள் திருப்பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் ரூ.2.68 கோடியில் பழைமையான 3 கோயில்கள் திருப்பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். பழைமையான 63 கோயில்களை புதுப்பிக்க ரூ.100 கோடியில் புனரமைக்கும் பணிகளை முத... மேலும் பார்க்க

150 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். சுங்குவாா்சத்திரம் அடுத்த கூத்தவாக்கம் பெருமாள் கோயில் தெருவை சோ்ந்தவா் முருகன்(47). ... மேலும் பார்க்க

குரு பூா்ணிமா: காலபைரவருக்கு மகா யாகம்

காஞ்சிபுரதில் உள்ள உதாசின் பாவாஜி மடத்தில் குரு பூா்ணிமாவையொட்டி கால பைரவா் மற்றும் அகத்திய மகரிஷி ஆகியோருக்கு மகா யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது. உலக நன்மை, மன அமைதி, உடல் ஆரோக்கியம் ஆகியனவற்றிற்காக ... மேலும் பார்க்க