செய்திகள் :

``பவுலிங் மோசமா இருக்கு; இனிமேலும் பொறுக்க முடியாது..." - பாக். அணி குறித்து வாசிம் அக்ரம்

post image
பாகிஸ்தான் அணியின் பவுலிங் மிக மோசமாக இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் விமர்சித்திருக்கிறார்.

2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி வழக்கம்போல குரூப் சுற்றிலேயே வெளியேறி இருக்கிறது. பாகிஸ்தான் அணியைப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியை வாசிம் அக்ரமும் விமர்சித்துப் பேசியிருக்கிறார். "பொறுத்தது போதும். இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாம் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரே வீரர்களை வைத்துக்கொண்டு தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறோம்.

பாகிஸ்தான்

இந்த முறை தைரியமான நடவடிக்கையை எடுத்து இளம் வீரர்களை உள்ளே கொண்டு வர வேண்டும். பயமில்லாமல் ஆடும் வீரர்களை ஒருநாள் மற்றும் டி20 அணியில் தேர்வு செய்யவேண்டும். ஐந்து அல்லது ஆறு வீரர்களை அணியை விட்டு நீக்கவேண்டி இருந்தாலும், அதைப்பற்றி யோசிக்காமல் இந்த முடிவை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் அடுத்த ஆறு மாதங்களுக்கு நாம் தோல்விகளை மட்டுமே சந்திக்க நேரிடும்.

ஆனாலும் அந்த இளம் வீரர்களை நாம் ஆதரிக்க வேண்டும். 2026 டி20 உலக கோப்பைக்கான அணியை இப்போதே கட்டமைக்க வேண்டும். இந்த ஆண்டு அமெரிக்கா, ஓமன் உட்பட 14 அணிகள் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளன. அந்த அணிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கூட பாகிஸ்தான் அணியின் பவுலிங் மிகவும் மோசமாக இருக்கிறது.

வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் அணியில் எந்த அடிப்படையில் அணித் தேர்வுகள் நடந்தன என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் கூட்டம் நடத்தி விவாதிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கடைசி பந்தில் ரன்னில் அவுட்... தோனியை கண்முன் கொண்டுவந்த RCBW; WPL வரலாற்றில் முதல் சூப்பர் ஓவர்

மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக அரங்கேறிய சூப்பர் ஓவரில், ஆர்.சி.பி அணியை உத்தரப்பிரதேச வாரியர்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறது.நடப்பு WPL-ன் ஒன்பதாவது போட்டியில் ப... மேலும் பார்க்க

CT 2025: `இந்தியாவுக்கு மட்டும் ஒரே மைதானம்... பெரிய சாதகம்' - பேட் கம்மின்ஸ் கூறுவதென்ன?

பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.சி.சி தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால், அதுவுமே முழுமையாகப் பாகிஸ்தானில் நடைபெறவில்லை. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு வர முடியாது என பி.சி.சி.ஐ... மேலும் பார்க்க

Sriram Sridharan: ஆஸி., அணிக்கு 6 வருடம் பயிற்சயளித்த ஸ்ரீராம் - உதவிப் பயிற்சியாளராக நியமித்த CSK

சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தா vs பெங்களூரு போட்டியுடன் இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 18-வது சீசன் தொடங்கவிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இரு போட... மேலும் பார்க்க

Virat Kohli : `Return Of the Dragon' சதமடித்த கோலி; திணறிப்போன பாகிஸ்தான் - உற்சாகமடைந்த ரசிகர்கள்

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து இந்திய அணியை வெல்ல வைத்திருக்கிறார் கோலி. கடந்த சில மாதங்களாகவே சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடாத கோலி சரியாக முக்கியமான சமயத்தில் 'Fire' ஆன ... மேலும் பார்க்க

PAK v IND: `சிரஞ்சீவி, வெங்கட் பிரபு, புஷ்பா பட இயக்குநர்' - துபாயில் குவிந்த நட்சத்திரங்கள்

இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு சென்று நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நேரில் செல்ல முடியாதவர்கள் எப்படியாவது டிவிகளிலும், ஒடிடி தளங்களிலும் கண்டு க... மேலும் பார்க்க

PAK v IND: `ஸ்பின்னர்களை வைத்து பாகிஸ்தானை அடக்கிய இந்தியா' - இந்த ஸ்கோர் எளிய இலக்கா?

சாம்பியன்ஸ் டிராபியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இந்திய ஸ்பின்னர்களின் ஆதிக்கத்தால் பாகிஸ்தான் அணி 241 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது. முதல் இன்ன... மேலும் பார்க்க