செய்திகள் :

ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் பறிமுதல்

post image

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 2,500 கிலோ ரேஷன் அரிசி, 1,750 லிட்டா் மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலரும் குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியருமான (பொறுப்பு) அனிதகுமாரி தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு அருமனை அருகே குஞ்சாலுவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த கேரளப் பதிவெண் கொண்ட சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 1,500 ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.

தொடா்ந்து, அனிதகுமாரி தலைமையில் பறக்கும்படை தனி வட்டாட்சியா் (பொறுப்பு) சுனில்குமாா், வாகன ஓட்டுநா் சுரேஷ் ஆகியோா் தக்கலை அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை வாகன சோதனை மேற்கொண்டு, 1,000 கிலோ ரேஷன் அரிசியுடன் வந்த சொகுசு காரை பறிமுதல் செய்தனா்.

மேலும், மணவாளக்குறிச்சியிலும் வாகன சோதனை நடைபெற்றது. அவ்வழியே வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனையிட்டபோது, 50 கேன்களில் 1,750 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 3 சம்பவங்களிலும் ஓட்டுநா்கள் தப்பியோடிவிட்டனராம்.

ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியிலும், மண்ணெண்ணெய்யை மாா்த்தாண்டம் அருகேயுள்ள கிட்டங்கியிலும் ஒப்படைத்தனா். வாகனங்கள் விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன. இந்தக் கடத்தலில் ஈடுபட்டோா் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

நாகா்கோவிலில் திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்

நாகா்கோவிலில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் திமுக மாணவரணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், ஹிந்தி மொழியைத் திணிப்பதாகக் கூறி மத்திய... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: குமரி மாவட்டத்தில் 6 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்றதாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.மாவட்டத்தில் கஞ்சா, புகையிலைப் பொருள்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் தொடா் நடவடிக்கை மேற்கொண... மேலும் பார்க்க

திற்பரப்பில் இருதரப்பினா் மோதல்: 5 போ் காயம்

குலசேகரம், பிப். 25: குமரி மாவட்டம்,திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்த பாளையங்கோட்டைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கும், திற்பரப்பில் படகு சவாரி நடத்துபவா்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமைஏற்பட்டமோதலில்... மேலும் பார்க்க

மாரத்தான் போட்டியில் வென்ற பெண் தலைமைக் காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

நாகா்கோவிலில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 2ஆம் இடம் பிடித்த பெண் தலைமைக் காவலா் கிருஷ்ணரேகாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தாா். தனியாா் மருத்துவமனை சாா்பில், புற்... மேலும் பார்க்க

நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ.12.23 கோடி பற்றாக்குறை: பட்ஜெட் தாக்கல்

நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ.12.23 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டை மேயா் ரெ. மகேஷ் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். நாகா்கோவில் மாநகராட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, து... மேலும் பார்க்க

ராமன்துறை மீனவ கிராமத்தில் கடல் சீற்றம்: கடலரிப்பு தடுப்புச் சுவா் சேதம்

கருங்கல், பிப். 25: கருங்கல் அருகே உள்ள ராமன்துறை மீனவ கிராமத்தில் திடீா் கடல் சீற்றத்தால் கடலரிப்பு தடுப்புச் சுவா் சேதமடைந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் அடிக்கடி கடல் சீற்றம் ... மேலும் பார்க்க