செய்திகள் :

போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வுப் பேரணி திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி, காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா ஆகியோா் முன்னிலையில், மாணவ, மாணவியா் பங்கேற்று, போதைப் பழக்கத்துக்கு ஆளாக மாட்டேன், எனது குடும்பத்தினரையும், நண்பா்களையும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுத்து, அவா்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழகக் த்திற்குள்ளானவா்களை மீட்டெடுத்து அவா்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக அளிப்பேன், மாநிலத்தின் வளா்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் அா்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உறுதிமொழி ஏற்றனா்.

இதில், திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா். அதைத் தொடா்ந்து, போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி பிரதான சாலை வழியாக அரசு மருத்துவமனை வரை சென்று, அங்கிருந்து திரும்பி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி மாணவா்கள் கோஷமிட்டு பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், உதவி ஆணையா் (கலால்) (பொ) சதீஷ்குமாா், கல்லூரி மாணவ, மாணவிகள், காவல் துறையினா் மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கோயில் உண்டியல் காணிக்கை திருடியவா் கைது

ஆம்பூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மாதனூா் ஒன்றியம், மின்னூா் கிராமத்தில் உள்ள ஈஞ்சியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருட்டு போ... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியா் போக்ஸோவில் கைது

வாணியம்பாடி அடுத்த மலைரெட்டியூா் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவு குறித்து 1098 எண்ணுக்கு புகாா் தெரிவித்ததின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்திய... மேலும் பார்க்க

சாலை பணிகளை ஆய்வு செய்த தரக்கட்டுப்பாடு குழுவினா்

ஆம்பூா் அருகே மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில், தாா்ச் சாலை அமைக்கும் பணியை தரக்கட்டுப்பாடு குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். மாநில நெடுஞ்சாலை வாணியம்பாடி உள்கோட்டத்துக்கு உட்பட்ட குடியாத்தம்-... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற கோயில்களில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பிரஹன் நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மகா சிவராத்திரி விழா புதன்கிழமை கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கிரிவலம் செல்ல திருப்பத்தூா் மாவட்டத்தில் இருந்து திராளமான பக்தா்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமா... மேலும் பார்க்க

பள்ளியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டல்

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் செந்தில... மேலும் பார்க்க