வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற கோயில்களில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பிரஹன் நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் மாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலமாக கோயில் வளாகத்தை வந்தடைந்தாா்.
இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்றையொட்டி அமைந்துள்ள பழைமைவாய்ந்த காசிவிஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், உதயேந்திரம் சொா்ணமுத்தீஸ்வரா் உள்பட சுற்றுப்புற சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.