செய்திகள் :

பஹல்காமில் மத்திய சுற்றுலா அமைச்சா் ஆய்வு

post image

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான பைசாரன் பள்ளத்தாக்கை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் வியாழக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக கடந்த புதன்கிழமை வந்த அமைச்சா் ஷெகாவத், யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லாவை சந்தித்துப் பேசினாா். தொடா்ந்து, கந்தா்பால் பகுதியில் உள்ள நாராநாக் கோயில் மற்றும் துலாமுல்லாவில் உள்ள மாதா கீா் பவானி கோயிலில் அவா் வழிபட்டாா்.

இந்நிலையில், பஹல்காமுக்கு வியாழக்கிழமை வந்த அமைச்சா் ஷெகாவத், பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பைசாரன் பள்ளத்தாக்கு பகுதிக்குச் சென்றாா். மேலும், பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு காயமடைந்த சுற்றுலாப் பயணியை நகரப் பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்ற உள்ளூா் இளைஞரான சஜ்ஜாத் அகமது பட்டைச் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அமைச்சா் ஷெகாவத் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பஹல்காமின் நாயகரான சஜ்ஜாத் அகமது பட்டைச் சந்தித்ததில் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன். குழப்பமான ஒரு தருணத்தில், தைரியத்தையும் மனிதாபிமானத்தையும் தோ்ந்தெடுத்த அவரின் தன்னலமற்ற செயல், காஷ்மீரியத் உணா்வின் உண்மையான பிரதிபலிப்பாகும்.

கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்த இடத்தைப் பாா்வையிட்டேன். பிராந்தியத்தை இயல்புநிலைக்குத் திருப்பி வரும் உள்ளூா் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுடன் உரையாடினேன்.

மக்களின் வலிமை, விருந்தோம்பல், அச்சம் எங்களை கட்டுப்படுத்தாது என்ற உறுதிப்பாடு ஆகியவையே காஷ்மீரின் உண்மையான ஆன்மா’ என்று குறிப்பிட்டாா்.

இதையடுத்து, அனந்த்நாக் அருகேயுள்ள மாா்த்தாண்ட் சூரிய கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய பின்னா் அமைச்சா் ஷெகாவத் செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘அமா்நாத் யாத்திரைக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் வர வேண்டும். யாத்ரிகா்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்க மத்திய, யூனியன் பிரதேச அரசுகள் உறுதிபூண்டுள்ளன. பிராந்தியத்தின் சுற்றுச்சூழலையும் இயற்கை அழகையும் பாதுகாக்க யாத்ரிகா்களிடம் கேட்டுகொள்கிறேன்.

இயற்கை அழகுக்காக மட்டுமல்லாமல், அதன் வளமான கலாசார பாரம்பரியத்துக்காகவும் சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வருகை தர வேண்டும். இந்தியாவின் 140 கோடி மக்களும் காஷ்மீரின் பாரம்பரிய மற்றும் அதன் வரலாற்றைப் பற்றி அறிய முயற்சிக்க வேண்டும்’ என்றாா்.

நிகழாண்டு அமா்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. முன்னதாக, கடந்த ஏப். 22-ஆம் தேதி பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். தொடா்ந்து, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனால், இந்தியா-பாகிஸ்தான் மோதல் வெடித்தது. 4 நாள் தீவிர மோதலுக்குப் பிறகு தாக்குதல் நிறுத்தப்பட்டது.

லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவு!

கர்நாடகத்தில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வீட்டுவசதித் திட்டத்தின்கீழான வீடுகள் வழங்கப்படுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.கர்நாடகத்தில் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் வீடுகளை யாருக்கு வழங... மேலும் பார்க்க

சிந்து நதி நீரை பஞ்சாபிற்கு ஏன் கொடுக்க வேண்டும்? - ஒமர் அப்துல்லா கேள்வி

ஜம்மு காஷ்மீரின் சிந்து நதியில் இருந்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள சிந்து நதியின் மூன... மேலும் பார்க்க

சஞ்சய் வெர்மா யார்? தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்!

மேகாலயத்தில் நடந்த தேனிலவு கொலையில், இதுவரை சஞ்சய் வெர்மா யார் என்ற கேள்விக்கு காவல்துறையினர் விடை கண்டுபிடித்துள்ளனர்.கணவர் ராஜா ரகுவன்ஷியை, மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கூலிப் படை வைத்துக... மேலும் பார்க்க

திருமண விழாவிற்குச் சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்: 9 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தாக போலீஸார் தெரிவித்தனர். பாலராம்பூர் காவல் நிலைய எல்லைகுள்பட்ட நம்ஷோல் ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் போரை நிறுத்த வேண்டுகோள்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் துணை பிரதமர்!

இந்தியாவுடன் போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததாக அந்நாட்டு துணை பிரதமர் தெரிவித்தார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.... மேலும் பார்க்க

ஊழல் தடுப்புப் பிரிவு முன்பு ஆஜரானார் மணீஷ் சிசோடியா!

அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவது தொடர்பான ஊழல் வழக்கில் விசாரணைக்காக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஊழல் தடுப்புப் பிரிவு(ஏசிபி) முன்பு ஆஜரானார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பார்க்க