செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

post image

புது தில்லி: பஹல்காம் தாக்குதல் தொடா்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா எழுதிய கடிதம்: பஹல்காம் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சோதனையான காலகட்டத்தில், கொல்லப்பட்டவா்களுக்கு இதயபூா்வமாக அஞ்சலி செலுத்த நாடாளுமன்றம் ஒன்றுகூட வேண்டும்.

இந்த விவகாரத்தில் நாட்டுக்கும், எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு முழு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஆலோசனை மற்றும் கருத்து ஒற்றுமை மூலம் கட்டமைப்படும் கூட்டுப் பொறுப்பே நாட்டை காப்பதற்கும், ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கும் மிகச் சரியான பாதையாகும்.

இதைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். அந்தக் கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், நாட்டு மக்களின் விருப்பங்கள், நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பில் அந்தத் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து வெளிப்படையான, கொள்கைபூா்வ விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

இதேபோல பஹல்காம் தாக்குதல் தொடா்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுமாறு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சந்தோஷ் குமாா் கடிதம் எழுதியுள்ளாா்.

முன்னதாக மத்திய அரசிடம் இதே கோரிக்கையை சுயேச்சை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் முன்வைத்தாா். இந்தியா ஒற்றுமையுடன் இருப்பதாக உலகுக்கு எடுத்துரைக்கும் நோக்கில், பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக கண்டன தீா்மானம் நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று அவா் கோரினாா்.

பஹல்காம்: முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் வீரர்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று இந்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாளை(ஏப். 30) அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் நாளை(ஏப். 30) நடைபெற உள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்... மேலும் பார்க்க

உளவுத் துறை எச்சரிக்கை: ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கக் கூட... மேலும் பார்க்க

சூரிய சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை வழங்கிய ராகுல்!

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் சூரிய சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வழங்கினார். இரண்டு நாள் பயணமாக தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலிக்கு வருகை தந்துள்ள காங்கிரஸ் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் சீனாவுக்கு வழங்கிய லடாக் பரிசை மோடி ரத்து செய்ய வேண்டும்: சுவாமி

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள சீனாவுக்கு வழங்கப்பட்ட லடாக் பரிசை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீரி... மேலும் பார்க்க

நெருக்கடியான நேரத்தில் நமது ஒற்றுமையைக் காட்ட வேண்டும்: மோடிக்கு ராகுல் கடிதம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியாவின் ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்க... மேலும் பார்க்க