செய்திகள் :

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

post image

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கராச்சியில் புதன்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தான் கராச்சியில் புதன்கிழமை காலை 9.34 மணியளிவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 அலகுகளாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கமானது மாலிர் பகுதிக்கு வடமேற்கே 7 கிமீ தொலைவில் நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல இடங்களில் நன்கு உணரப்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் கூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ மற்றும் பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக, செப்டம்பர் 16 ஆம் தேதி 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

An earthquake of magnitude 3.2 was recorded in Pakistan's Karachi on Wednesday (local time), as per the Pakistan Meteorological Department

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

துப்பாக்கிகள் வைத்து ஆயுத, சரஸ்வதி பூஜை கொண்டாடிய புதுச்சேரி போலீசார்

புதுச்சேரி காவல்துறை ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் காவலர்கள் சார்பில் துப்பாக்கிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு ஆயுத, சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் ஆயுத பூஜை விழா பல்வ... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் காந்தி ஜெயந்தி விழா!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவொற்றியூர் நல சங்கம் சார்பில் அங்குள்ள காந்தி சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியடிகளின் 157 ஆவது பிறந்த நாளையொட்டி, திருவொற்றியூர... மேலும் பார்க்க

குணசீலத்தில் தேரோட்டம்!

மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம், குணசீலத்தில் ஸ்ரீபிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் பிரம்மோத்ஸவ விழாவில் வியாழக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என... மேலும் பார்க்க

நமது கருத்து மற்ற மதத்தினரை அவமதிக்கும் வகையில் இருக்கக் கூடாது: மோகன் பாகவத்

நமது கருத்துகள் மற்ற மதத்தினரை அவமதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் மோகன் பாகவத் பேசுகையில், சில வெள... மேலும் பார்க்க

சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு எதிரொலியாக மேட்டூர் அணை நீர்மட்டம் மள மளவென சரியத் தொடங்கியது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி, க... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 116.29 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,358 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,312 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசன... மேலும் பார்க்க