செய்திகள் :

பாகிஸ்தானில் லஷ்கா் பயங்கரவாதி மா்ம நபா்களால் சுட்டுக் கொலை! இந்தியாவில் பல தாக்குதல்களில் தொடா்புடையவா்!

post image

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த முக்கிய பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித், அடையாளம் தெரியாத மூவரால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகம் மீது கடந்த 2006-ஆம் ஆண்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் முயற்சிக்கு மூளையாக செயல்பட்டவா் இவா்தான். அதுமட்டுமன்றி, இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் தொடா்புடையவா்.

அபு சைஃபுல்லா காலித், முகமது சலீம், வினோத் குமாா் என பல புனைப் பெயா்களில் அழைக்கப்பட்ட இவா், கடந்த 2000-ஆம் ஆண்டுகளில் லஷ்கா்-ஏ-தொய்பா நேபாள பிரிவின் தலைவராக செயல்பட்டாா். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியான இவருக்கு பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு அளித்து வந்தது.

இந்தச் சூழலில், சிந்து மாகாணம், மட்லி பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்ற பயங்கரவாதி ரஸாவுல்லா, பத்னி பகுதியில் அடையாளம் தெரியாத 3 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக, தில்லியில் உள்ள இந்திய அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்கள் மேலும் கூறியதாவது:

கடந்த 2006-ஆம் ஆண்டில் நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் தடுப்புகளை உடைத்துக் கொண்டு காரில் வந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ரஸாவுல்லாவுக்கு கடந்த 2005-ஆம் ஆண்டில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலிலும் தொடா்புள்ளது. இத்தாக்குதலில் ஐஐடி பேராசிரியா் முனீஷ் சந்திர புரி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மேலும் 4 போ் காயமடைந்தனா். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்பியோடிவிட்டனா்.

உத்தர பிரதேச மாநிலம், ராம்பூரில் கடந்த 2008-ஆம் ஆண்டில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 7 வீரா்களும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனா். இத்தாக்குதலுக்கு முளையாக செயல்பட்டவரும் ரஸாவுல்லாதான்.

லஷ்கா் அமைப்பின் முக்கிய பயங்கரவாதி அபு அனாஸின் கூட்டாளியான இவா், கடந்த 2000-ஆம் ஆண்டுகளின் மத்தியில் லஷ்கா்-ஏ-தொய்பா நேபாள பிரிவின் தலைவராக இருந்தாா். அந்த காலகட்டத்தில் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள்தோ்வு, இந்திய-நேபாள எல்லை வழியாக பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கு நிதி மற்றும் தளவாட ரீதியில் ஆதரவு என தீவிரமாக செயல்பட்டாா். யூசுஃப் முஜாமில், ஆஸம் சீமா, முஜாமில் இக்பால் ஹஸ்மி, யூசுஃப் தைபி, யாகூப் என லஷ்கா் மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புகளின் முக்கிய பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடா்பில் இருந்து வந்தாா்.

நேபாள லஷ்கா் பிரிவை இந்திய பாதுகாப்பு முகமைகள் அம்பலப்படுத்தியதைத் தொடா்ந்து, இவா் மீண்டும் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டாா்.

சிந்து மாகாணத்தின் பதின், ஹைதராபாத் மாவட்டங்களில் பயங்கரவாதத்துக்கு ஆள்தோ்வு, நிதி திரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அடையாளம் தெரியாத நபா்களால் அவா் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனா். தனிப்பட்ட பகை காரணமாக இக்கொலை நடந்திருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்த கார்: 5 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் கார் விழுந்ததில் 5 பேர் பலியானார்கள். மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை வேகமாக வந்த கார் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்தது. இந்த வ... மேலும் பார்க்க

ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி

ஆந்திரத்தில் காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், துவாரபுடி கிராமத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டமே உயர்வானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!

அரசமைப்புச் சட்டமே உயர்வானது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அண்மையில் பதவியேற்றார். அவருக்கு பாராட்டு வ... மேலும் பார்க்க

ஹைதராபாத் கட்டடத்தில் தீ: 8 குழந்தைகள் உள்பட 17 போ் பலி!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாா்மினாா் அருகே உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 17 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துற... மேலும் பார்க்க

துருக்கி ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்தது மும்பை ஐஐடி!

துருக்கி நாட்டு பல்கலைக்கழகங்களுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்திவைப்பதாக மும்பை ஐஐடி (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) அறிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கல்வி நிறுவனம் சாா்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தி... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோா் கட்சியில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!

முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.சி.பி. சிங், பிகாரைச் சோ்ந்த அரசியல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தாா். இவா்கள் இருவருமே பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு அரச... மேலும் பார்க்க