செய்திகள் :

பாகிஸ்தானில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: ஊடுருவல் முறியடிப்பு!

post image

ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்திலிருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்குள் ஊடுருவ முயன்ற எட்டு தீவிரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

ஃபிட்னா அல்-கவாஜ் தீவிரவாதிகள் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எலையைக் கடக்க முயற்சிப்பதாக உளவுத்துறைக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து பஜௌர் மாவட்டத்தின் லோவி மாமுண்ட் தாலுகாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை காயமடைந்த நிலையில் லார்கோலோசோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது, பின்னர் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

தீவிர வாதிகளின் ஊடுருவலைத் தக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதுடன், கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

முன்னதாக, ஜூலை 2 ஆம் தேதி கார் தாலுகாவில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது. அரசு வாகனத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தாசில்தார் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். காவலர் உள்பட 17 பேர் காயமடைந்தனர்.

Pakistani security forces shot dead eight militants attempting to infiltrate into the country's Khyber Pakhtunkhwa province from Afghanistan's Kunar province, officials said on Wednesday.

கர்நாடகத்தில் மாரடைப்பு மரணங்கள்: மருத்துவமனைகளில் குவியும் மக்கள்!

கர்நாடகத்தில் மாரடைப்பால் அதிகம் பேர் மரணமடைந்துள்ள நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் 40 நாள்களில் 23 பேர் மாரடைப... மேலும் பார்க்க

குஜராத்: பாலம் இடிந்து விழுந்ததில் 15 ஆக உயர்ந்த பலி!

குஜராத்தின் வதோதராவில் 40 ஆண்டுகள் பழைமையான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா கூறுகையில், இந்த நிலையில்,... மேலும் பார்க்க

அவசரநிலை, இந்திரா காந்தியை விமர்சித்த சசி தரூர்!

அவசரநிலை காலம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் திருவனந்தபுரம் மக... மேலும் பார்க்க

மனைவி மீது சந்தேகம்! குழந்தைக்கு டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிட முடியாது

மும்பை: கணவருக்கு, தன்னுடைய மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும், விதிவிலக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கனமழைக்கு 11 பேர் பலி!

பாகிஸ்தானின் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் லாகூர், பஞ்சாப் மாகாணத்தில் சுற்றியுள்ள மாவட்டங்கள், பலுசிஸ்தானின் சில பகு... மேலும் பார்க்க

ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி.எம்.பனீந்த்ரா சர்மா, ச... மேலும் பார்க்க