செய்திகள் :

பாகிஸ்தானுக்கு இனி அதிக நாள்கள் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு!

post image

பாகிஸ்தான் 75 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டது, இனி அதிக நாள்கள் இல்லை என உத்தரப் பிரதேச முதல்வர் பேசியுள்ளார்.

அயோத்தியில் ஹனுமான் கதா மண்டபத்தை இன்று (மே 23) திறந்து வைத்தபின், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பயங்கரவாதம் பாகிஸ்தானை ஒருநாள் முழுவதுமாக அழித்துவிடும் எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நமது இந்திய ராணுவம் பாகிஸ்தானை, முதலில் தாக்கவில்லை, பாகிஸ்தான் முதலில் நமது அப்பாவி மக்களிடம் தங்களது மதத்தைக் கேட்டு சுட்டுக்கொன்றதாகக் கூறியதுடன், இந்திய வீரர்களின் பதிலடியில் 124 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

”பாகிஸ்தான் நீண்டகாலமாக பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகின்றது. நான் உறுதியாகச் சொல்கிறேன், பயங்கரவாதம் பாகிஸ்தானை ஒருநாள் அழித்துவிடும். மேலும், பாகிஸ்தான் சுமார் 75 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டது. தற்போது, அவர்களது செயலுக்காக அந்நாடு தண்டனையை அனுபவிக்கும் காலம் வந்துவிட்டது. இன்று, இந்தியாவின் தைரியமான வீரர்கள் மிகுந்த பலத்துடன் பாகிஸ்தானுக்கு பதிலளித்து வருகின்றனர். நமது ராணுவ வீரர்களைப் பற்றி அனைத்து இந்தியர்களும் பெருமைக்கொள்ள வேண்டும்.” எனவும் அவர் பேசியுள்ளார்.

இத்துடன், பாகிஸ்தானுக்கு இன்னும் அதிக நாள்கள் இல்லை எனக் கூறிய அவர், நமது துறவிகளில் ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆன்மீக உலகில் இடமில்லை என அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டடப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அரசுதான் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியதுடன், அங்குள்ள துறவிகள் அயோத்தியின் புகழை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்குத் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையாம்! ஒரு மழைக்கே இப்படியா?

அமெரிக்கா: பாகிஸ்தான் எதிர்விளைவைப் பெறும்! சசி தரூர் எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் தகுந்த எதிர்விளைவைப் பெறும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்த... மேலும் பார்க்க

தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss Worl... மேலும் பார்க்க

பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!

பெங்களூரில் கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திக்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.பெங்களூரில் 84 வயதான முதியவர் ஒருவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மே 13 ஆம் தேதியில் தனியா... மேலும் பார்க்க

தில்லியில் கனமழை! 100 விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.தில்லியில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தில்லியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட ந... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: பாதுகாப்புப் படைகள், பிரதமருக்கு பாராட்டு

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை ஒருமனதாக பாராட்டியதாகவும், ஆயுதப் படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தியதாகவும் தில்லி ம... மேலும் பார்க்க