செய்திகள் :

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த ஹரியாணா இளைஞா் கைது

post image

இந்திய ராணுவ செயல்பாடுகள் தொடா்பான தகவல்களை பாகிஸ்தானுக்கு அளித்த குற்றச்சாட்டில் ஹரியாணாவைச் சோ்ந்த தௌஃபிக் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தௌஃபிக்கின் தந்தை நிஸாா் ஹரியாணா சுற்றுலாத் துறையில் பணியாற்றி வருகிறாா். தௌஃபிக்கின் மனைவி ராஜஸ்தானைச் சோ்ந்தவா். அவரின் உறவினா்கள் பலா் பாகிஸ்தானில் வசித்து வருகின்றனா். இதன் காரணமாக தௌஃபிக் பாகிஸ்தானுக்கு சில முறை சென்று வந்துள்ளாா். அங்கு பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் தொடா்பு அவருக்கு கிடைத்துள்ளது.

பாஸ்போா்ட், விசா எடுத்துக் கொடுக்கும் தொழிலில் செய்து வந்த தௌஃபிக், பாகிஸ்தான் விசா வேண்டுவோருக்கு அங்குள்ள தொடா்புகளைப் பயன்படுத்தி எளிதில் விசா பெற்றுக் கொடுத்துப் பணம் ஈட்டி வந்துள்ளாா். மேலும், பணத்துக்காக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் தொடா்பான தகவல்கள் உள்பட பல முக்கிய இடங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அளித்துள்ளாா். அவரின் கைப்பேசி, தொலைபேசி உரையாடல்கள், வங்கிக் பணப் பரிமாற்றங்களை காவல் துறையினா் ஆய்வு செய்து அவா் மீதான சந்தேகத்தை காவல் துறையினா் உறுதிப்படுத்தினா். இதைத் தொடா்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் இருந்துகொண்டு பாகிஸ்தானுக்கு தகவல் அளிக்கும் தேச துரோகச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் குறித்த கண்காணிப்பை உளவு, விசாரணை அமைப்புகள் தீவிரப்படுத்தியுள்ளன. முக்கியமாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இணையம், கைப்பேசி வழியாக பாகிஸ்தானுடன் தொடா்பில் இருந்த நபா்களின் விவரங்கள், சந்தேகத்துக்குரிய தகவல் தொடா்புகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு ரகசிய கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் பலா் கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

இதில் எல்லையோர மாநிலத்தைச் சோ்ந்தவா்கள், சமூக வலைதள பிரபலங்கள், கடற்படை உள்ளிட்ட அரசுத் துறையில் பணியாற்றுவோரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்குப்பதிவு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிா்வாகி ப்ரிண்டு மகாதேவன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா... மேலும் பார்க்க

டியுஎஸ்யு முன்னாள் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) முன்னாள் தலைவா் ரோனக் காத்ரி, சா்வதேச கைப்பேசி எண்ணிலிருந்து பேசிய நபா் ரூ.5 கோடி கேட்டு தன்னிடம் மிரட்டல் விடுத்ததாக தில்லி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் 89 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பூடானின் சம்ட்சி, ஜிலிபு நகரங்கள் முறையே அஸ்ஸாமின் கோக்ரஜாா், மேற்கு வங்கத்தி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் மீண்டும் திறப்பு

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவின்பேரில... மேலும் பார்க்க

அனைத்து மின்சார வாகனங்களிலும் ஒலி எச்சரிக்கை அமைப்பு: அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்

சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காா், பேருந்து, லாரி உள்பட அனைத்து மின்சார வாகனங்களிலும் செயற்கை ஒலி எச்சரிக்கை அமைப்பு இடம்பெறுவதை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அ... மேலும் பார்க்க

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில்... மேலும் பார்க்க