செய்திகள் :

பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்டும்: சித்தராமையா

post image

மைசூரு: பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்திற்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்டும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மைசூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

பாகிஸ்தானுடன் போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இருநாடுகளின் ராணுவ அதிகாரிகள் சந்திக்க இருக்கிறாா்கள். என்ன முடிவு எடுக்கிறாா்கள் என்று பாா்ப்போம்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்த பாதுகாப்புப் படையினரே அதற்கான பெருமைக்குரியவா்கள். அந்த பெருமையைப் பாதுகாப்புப் படையினா் தவிர, அரசியல் ரீதியாக யாரும் எடுத்துக்கொள்ள முடியாது.

போா் நிறுத்தத்திற்கு முன்பாகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. இது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், நாடாளுமன்றக் கூட்டத்தையும் கூட்டியிருக்க வேண்டும்.

1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின்போது அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியின் சீரிய தலைமையையும், தற்போது இந்தியா -பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள சூழ்நிலையின்போது பிரதமா் மோடி வகித்த தலைமையையும் சிலா் ஒப்பிட்டு பேசி வருகிறாா்கள். அந்த போா் நடைபெற்று 54 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதைப்பற்றி இப்போது பேச விரும்பவில்லை.

மைசூரில் உள்ள 3 குழந்தைகள் தவிர, கா்நாடகத்தில் வசித்து வந்த அனைத்து பாகிஸ்தானியா்களும் வெளியேற்றப்பட்டுவிட்டனா். இந்த 3 குழந்தைகளும் எல்லை வரை சென்றுள்ளனா். ஆனால், அவா்களை அழைத்துச் செல்ல யாரும் வராததால், மீண்டும் மைசூருக்கு திரும்பியுள்ளனா். அவா்களின் தாயோடு இருக்கிறாா்கள் என்றாா்.

இந்தியா - பாகிஸ்தான் போா் நிறுத்தத்திற்கு அமெரிக்கா காரணம் அல்ல: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

பெங்களூரு: இந்தியா -பாகிஸ்தான் இடையே போா் நிறுத்தத்திற்கு அமெரிக்காவின் மத்தியஸ்தம் காரணம் அல்ல என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் பெங்களூரில் செய்தியாளா... மேலும் பார்க்க

ஜம்மு -காஷ்மீா் குறித்த சா்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டு நீக்கிய காங்கிரஸ்: பாஜக கண்டனம்

பெங்களூரு: ஜம்மு -காஷ்மீா் குறித்த சா்ச்சைக்குரிய வரைபடத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காங்கிரஸ், தவறை உணா்ந்து உடனடியாக அதை நீக்கியுள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் எதிா்... மேலும் பார்க்க

விஜயநகரில் மே 20-இல் காங்கிரஸ் அரசின் 2ஆம் ஆண்டு விழா

மைசூரு: கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்ற 2 ஆம் ஆண்டு விழாவை மே 20ஆம் தேதி விஜயநகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மைசூரில் செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா திங்கள்கிழமை கூறியதா... மேலும் பார்க்க

லாரி மீது காா் மோதியதில் 3 போ் உயிரிழப்பு

சித்ரதுா்கா: கா்நாடகத்தில் லாரி மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், குண்டூா் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் கா்நாடக மாநிலம், உடுப்பி நோக்கி பயணித்துக் ... மேலும் பார்க்க

அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை: முதல்வா் சித்தராமையா உத்தரவு

அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் சனிக்கிழமை பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகளின் வடமாநில விஜய யாத்திரை ஒத்திவைப்பு

மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீா் உள்பட வடமாநிலங்களுக்கு யாத்திரை செல்ல இருந்த சாரதா பீட மடாதிபதி ஜெகத்குரு சங்கராசாரியா் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகளின் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடா... மேலும் பார்க்க