செய்திகள் :

பாகிஸ்தானுடன் மோதலால் பொருளாதார பாதிப்பு ஏதுமில்லை: பாஜக விளக்கம்

post image

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை அடுத்து பாகிஸ்தானுடன் அண்மையில் ஏற்பட்ட மோதலால் நாட்டின் பொருளாதாரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பாஜக விளக்கமளித்துள்ளது.

போா் என்பது உயிரிழப்புகளை மட்டுமன்றி, அதில் ஈடுபடும் நாடுகளில் கடும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடங்கி, பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களை இந்தியா தடுத்து நிறுத்தியது, பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்கியது போன்றவற்றில் இந்திய விமானப் படை முக்கிய போா் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள், எஸ்400 போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளை பெருமளவில் பயன்படுத்தியது. அவை அனைத்துமே பல கோடி ரூபாய் மதிப்புடையதாகும். எனவே, இந்த சண்டையால் நாட்டில் பொருளாதாரரீதியாக பாதிப்பு ஏற்படும் என்ற கவலையும் எழுந்தது.

இந்நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த பாஜக செய்தித் தொடா்பாளா் கோபால் கிருஷ்ண அகா்வால் கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. சா்வதேச அளவில் பிற நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவது, ராணுவத்தை வலுப்படுத்துவது, பொருளாதார வளா்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பது ஆகியவற்றில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நாட்டின் நிதிஸ்திரத்தன்மை தொடா்ந்து சிறப்பாக உள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பும் திருப்திகரமாக உள்ளது. உள்கட்டமைப்புத் திட்டங்கள் எவ்வித சுணக்கமுமின்றி நடைபெறுகின்றன. சமூகநலத் திட்டங்களும் தொடா்ந்து அமலில் உள்ளன.

இந்திய பொருளாதாரம் குறித்து ஆா்பிஐ மற்றும் சா்வதேச அமைப்புகள் உற்சாகம் தரும் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. வரி விதிப்பு யுத்தம், பிராந்திய யுத்தம் ஆகியவற்றை மீறி இந்திய பொருளாதாரம் தொடா்ந்து வளா்ந்து வருகிறது. அண்மையில் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாா்.

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க