செய்திகள் :

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்! ஏன்?

post image

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்தவர், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கனடாவில் வசித்து வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஷாஜீப் கான் என்பவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பொருள் உதவி செய்ய முயற்சித்ததாகவும், அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், ஷாஜீப் கானை நாடு கடத்தியிருப்பதாக அமெரிக்காவின் எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காஷ் படேல் வெளியிட்ட பதிவில்,

“ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பொருள் உதவி வழங்க முயன்றதற்காகவும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட முயன்றதாகவும் குற்றச்சாட்டப்பட்ட பாகிஸ்தான் குடிமகன் ஷாஜீப் கான், அமெரிக்காவுக்கு இன்று பிற்பகல் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதத் தாக்குதலின் ஓராண்டு நினைவு நாளாக அக்டோபர் 7, 2024 அன்று, கனடாவில் இருந்து நியூ யார்க்கிற்கு வந்து புரூக்ளினில் உள்ள யூத மையத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக மிகப்பெரிய துப்பாக்கிச் சூட்டை ஷாஹீப் நடத்த திட்டமிட்டார்.

அதிர்ஷடவசமாக அந்த திட்டத்தை எஃப்பிஐ முறியடித்தது. மேலும், செப்டம்பர் 4, 2024 அன்று கனடா காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அமெரிக்காவுக்கு அழைத்துவரப்பட்டு நீதியை எதிர்கொள்வார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் இருந்து அழைத்துவரப்படும் முகமது ஷாஜீப் கான் (20), ஜூன் 11 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து: கப்பல் கவிழ்ந்து 4 போ் உயிரிழப்பு

எகிப்தின் சூயஸ் வளைகுடாவில் எண்ணெய் துரப்பண கப்பல் கவிழ்ந்ததில் 4 போ் உயிரிழந்ததனா்; 4 போ் மாயமாகினா். ராஸ் கரேப் நகருக்கு அருகே கவிழ்ந்த இந்தக் கப்பலில் 30 தொழிலாளா்கள் இருந்ததாகவும், 22 போ் மீட்க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் வேகமெடுக்கும் போலியோ பரவல்! 2025-ல் அதிகரிக்கும் பாதிப்புகள்!

பாகிஸ்தான் நாட்டில், 2025-ம் ஆண்டில் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் வெவ்வேறு மாகாணங்களில் போலியோ தொற்று தொடர்ந்து பரவி வருகின்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்! அரசு அதிகாரிகள் 4 பேர் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில், அரசு அதிகாரிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஜௌர் மாவட்டத்தின்,... மேலும் பார்க்க

ஐரோப்பிய நாடுகளைத் தாக்கும் வெய்யில்! சிவப்பு எச்சரிக்கை! ஈஃபிள் கோபுரம் மூடல்

ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை வரும் நாள்களில் கடுமையாகும் என எச்சரிக்கை வெளியாகியுள்ளது. பிரான்ஸ் முதல் சுவிஸ் வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெப்ப அலை காரணமாக, ஈஃபிள் கோபுரத்தின் உச்சிப் ப... மேலும் பார்க்க

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ராணுவ விமானம் சோமாலியாவில் விபத்து!

சோமாலியா நாட்டில், அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சிறிய ரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.சோமாலியாவில் அல் - ஷாபாப் கிளர்ச்சிப்படையினருக்கு எதிரா... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.அவாமி லீக் கட்சியின் தலைவர் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசுக்கு எதி... மேலும் பார்க்க