செய்திகள் :

பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து!

post image

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஏப்ரல் 5) நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 42 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது.

இதையும் படிக்க: இன்றுடன் ஓய்வு பெறுகிறாரா தோனி?

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 42 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் அதிகபட்சமாக 40 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரைஸ் மரியூ 58 ரன்களும், டேரில் மிட்செல் 43 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் அகிஃப் ஜாவத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நசீம் ஷா 2 விக்கெட்டுகளையும், ஃபஹீம் அஷ்ராப் மற்றும் சூஃபியான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஒவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், நியூசிலாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அப்துல்லா சஃபீக் மற்றும் தையாப் தஹீர் தலா 33 ரன்கள் எடுத்தனர்.

இதையும் படிக்க: ராகுல் டிராவிட் போன்ற அற்புதமான மனிதர் கிடைப்பது அரிது: யஷஸ்வி ஜெய்ஸ்வால்

நியூசிலாந்து தரப்பில் பென் சியர்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜேக்கோப் டஃபி 2 விக்கெட்டுகளையும், மைக்கேல் பிரேஸ்வெல், முகமது அப்பாஸ் மற்றும் டேரில் மிட்செல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

நீட் விலக்கு இருந்தால்தான் பாஜகவுடன் கூட்டணி இபிஎஸ் அறிவிப்பாரா?: முதல்வர் கேள்வி

உதகை: நீட் விலக்கு இருந்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என அறிவிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.நீலகிரி மாவட்டத்தில் ரூ.143.69 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நீலகிரி அ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை: தொகுதி மறுசீரமைப்பு குறித்து விளக்கம் கேட்டும் ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவில்லை. விளக்கம் அளிக்காதவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்... மேலும் பார்க்க

பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை: முத்தரசன்

சேலம்: பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணியும் நிலையில் அதிமுக உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூன... மேலும் பார்க்க

இந்தியா-இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழா்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: வைகோ கண்டனம்

சென்னை: இந்தியா-இலங்கை உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடும் துரோகம் என்று மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.இதுதொடா்பாக அவா் வ... மேலும் பார்க்க

வஃக்ப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல: ஜெ.பி. நட்டா

புது தில்லி: வஃக்ப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல. அவை சட்டத்தின் எல்லைக்குள் செயல்படுவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்றும் அதன் மூலம் அவற்றின் சொத்துகளும் நிதியு... மேலும் பார்க்க

மக்களின் நம்பிக்கை சின்னமாக தாமரை உள்ளது: அமித் ஷா

புதுதில்லி: பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாளில் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டு மக்களின் இதங்களில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் சக்திவாய்ந்த சின்னமாக ... மேலும் பார்க்க