செய்திகள் :

பாகிஸ்தான் அதிபர் பதவி விலகல்? உள்துறை அமைச்சர் விளக்கம்!

post image

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி பதவி விலகுவதாக வெளியான செய்திகளுக்கு, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி பதிலளித்துள்ளார்.

பாகிஸ்தானின் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி பதவி விலகுவதாகவும், அவருக்கு பதிலாக அந்நாட்டின் ராணுவ ஃபீள்ட் மார்ஷல் அசீம் முனிர் அதிபராகப் போவதாகவும், சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இந்தச் செய்திகள் அனைத்தும் வதந்தி என நிராகரித்த பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி; பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், அதிபர் ஜர்தாரி ஆகியோரைக் குறிவைத்து இத்தகைய பிரச்சாரத்தை யார் செய்கின்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், என்று தனது எக்ஸ் வலைதளத்தில் பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கூறியிருப்பதாவது:

“நான் பட்டியலிட்டு கூறியிருக்கின்றேன், அதிபரை பதவி விலகக் கேட்பது குறித்து, எந்தவொரு உரையாடலோ அல்லது சிந்தனையோ இல்லை. அவர், ராணுவ தலைவர்களுடன் வலுவான மற்றும் மரியாதைக்குரிய உறவுகளையே கொண்டுள்ளார்.

இந்தப் பொய்யான தகவல்களை பரப்பும் அனைவரும், வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து உங்கள் விருப்பம்போல் செயல்படுங்கள். எங்களைப் பொறுத்தவரை, பாகிஸ்தானை மீண்டும் வலுவாக்க என்ன தேவையோ அதை நாங்கள் செய்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களை யார் பரப்புகிறார்கள், ஏன் பரப்புகிறார்கள், இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என அனைத்தும் தனக்குத் தெரியும் என்று அதிபர் ஜர்தாரி கூறியதாக, அமைச்சர் நக்வி மேற்கோள் காட்டியுள்ளார்.

முன்னதாக, கடந்த 2022-ம் ஆண்டு அசீம் முனீர் 3 ஆண்டுகாலத்திற்கு ராணுவத் தலைவராகப் பதவி உயர்த்தப்பட்டார். ஆனால், கடந்த 2024-ல் அவரது பதவிகாலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்து அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!

பசிபிக் கடலின் மிக ஆழமான அபிஸ்ஸோபெலாஜிக் மண்டலத்தில், ரோபோ உதவியோடு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பாறைகளுடன் ஒட்டியிருந்த 4 கருப்பு முட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த முட்டைகளை மேற்பரப்புக்குக் கொண்வந்... மேலும் பார்க்க

மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்

மரபணு கோளாறால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த 8 வயது சிறுவன், ஆய்வக பரிசோதனையில் இருந்த மருந்தை, சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டபோது, மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம் விஞ்ஞானிகளுக்கு ம... மேலும் பார்க்க

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க