செய்திகள் :

பாகிஸ்தான் ஆதரவு கருத்து: அஸ்ஸாம் எம்எல்ஏ இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது!

post image

பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பஹல்காம் தாக்குதல் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அஸ்ஸாமைச் சோ்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக கடந்த மாத இறுதியில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் இந்திய அரசு மற்றும் பாஜகவின் சதி என்றும், தோ்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக அரசே மக்களை பயங்கரவாதிகளை வைத்து கொலை செய்வதாகவும் அமீனுல் இஸ்லாம் கூறியிருந்தாா். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அஸ்ஸாம் காவல் துறையினா் தாமாக முன்வந்து அவா் மீது தேச துரோகம், தேச ஒற்றுமைக்கு எதிராகப் பேசுவது, இரு தரப்பினா் இடையே மோதலை உருவாக்குவது, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற இஸ்லாம் புதன்கிழமை சிறையில் இருந்து வெளியே வந்தாா்.

இதைத் தொடா்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசிய குற்றச்சாட்டில் அவா் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

‘எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து. அதற்கும் கட்சிக்கும் தொடா்பில்லை’ என்று அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சித் தலைமை கூறியுள்ளது.

பாகிஸ்தான் கொடிகளை விற்பனை செய்வதா? அமேசான் உள்ளிட்ட இ-வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

பாகிஸ்தான் கொடிகளை விற்பனை செய்த அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட இ-வணிக நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உண்டாகி,... மேலும் பார்க்க

'ஆபரேஷன் சிந்தூர் ட்ரைலர்தான்; பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த பாகிஸ்தான்' - ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று(வியாழக்கிழமை) ஜம்மு-காஷ்மீர் சென்ற நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) குஜராத் புஜ் விமானப்படைத் தளத்திற்குச் சென்றுள்ளார். அங்கு விமானப்படை வீரர்கள் ம... மேலும் பார்க்க

நட்டா அறிவுறுத்தல்: டிரம்ப் பற்றிய எக்ஸ் பதிவை நீக்கிய கங்கனா ரணாவத்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றி நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் வெளியிட்ட எக்ஸ் பதிவை, பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவின் அறிவுறுத்தலின்படி நீக்கியிருக்கிறார்.ஆப்பிள் நிறுவனமானது, அதன் உற்... மேலும் பார்க்க

தேசிய சட்டப் பல்கலை. சிறப்புப் பேராசிரியரானார் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி!

தில்லி தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகச் சேர்ந்துள்ளார் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட். இது குறித்து தேசிய சட்டப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களைக் கழுவிய இந்தியப் பெண்கள்! வைரலாகும் விடியோ!

உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த போட்டியாளர்களின் பாதங்களை இந்திய மகளிர் கழுவும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.உலக அழகிப் போட்டியின் இறுதி நிகழ்வு தெலங்கானாவில் மே 31... மேலும் பார்க்க

துருக்கி நிறுவனமான செலிபிக்கு பாதுகாப்பு அனுமதி ரத்து: பிசிஏஎஸ் நடவடிக்கை

துருக்கி நிறுவனமான செலிபி ஏா்போா்ட் சா்வீசஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) ரத்து செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலை த... மேலும் பார்க்க