செய்திகள் :

பாகிஸ்தான் ‘ட்ரோன்’ விரட்டியடிப்பு: நள்ளிரவில் பரபரப்பு

post image

ஜம்மு: பாகிஸ்தானில் இருந்து ‘ட்ரோன்’ (ஆளில்லாத சிறிய ரக விமானம்) ஒன்று நள்ளிரவு நேரத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியைக் கடந்து இந்தியப் பகுதியில் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் அதனை நோக்கி துப்பாக்கியால் சுட்டத்தையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிக்குள் அந்த ‘ட்ரோன்’ பறந்து சென்று மறைந்துவிட்டது.

வரும் 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் எல்லைப் பகுதி உள்பட நாடு முழுவதும் தீவிரமான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ட்ரோன் ஒன்றை எல்லையைக் கடந்து அத்துமீறி பறந்தது. சுதாரித்துக் கொண்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் அதனை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து, அந்த ‘ட்ரோன்’ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிக்குள் நுழைந்து மறைந்துவிட்டது.

புதன்கிழமை காலையில் அந்த பகுதியில் வீரா்கள் சோதனை நடத்தினா். ஆனால், சந்தேகப்படும் படியான பொருள்கள் ஏதும் சிக்கவில்லை. எல்லைக்கு அப்பால் இருந்து ஆயுதங்கள், போதைப்பொருள்களை இந்திய எல்லைக்குள் ‘ட்ரோன்’ மூலம் கடத்தும் முயற்சியில் பயங்கரவாதிகள் தொடா்ந்து ஈடுபடுகின்றனா். எனவே, இந்த சோதனை நடத்தப்பட்டது.

மகாராஷ்டிரம்: உலகளவில் அதிகபட்ச ஜிபிஎஸ் பாதிப்பு?

இந்தியாவில் மகாராஷ்டிரத்திலும், மேற்கு வங்கத்திலும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்தியாவில் பரவிவரும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பால் (Guillain-Barré Syndrome) உலகளவில் ஒரே நேரத்தில் அதிகப்ப... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் விபத்து: கார் மோதியதில் 5 பேர் காயம், ஓட்டுநர் கைது

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கார் மோதியதில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.மகாராஷ்டிர மாநிலம், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரை இறக்கிவிடுவதற்காக சொகுசு கார் ஒன்று ஞா... மேலும் பார்க்க

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மேற்கு வங்கத்தின்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தொண்டர்களைத் தாக்கும் பாஜகவினர்: ஆணையத்துக்கு கேஜரிவால் கடிதம்!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி களப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆம் ஆத்மி தொண்டர்களை பாஜகவினர் மிரட்டுவதாகவும், தாக்குதலில் ஈடுபடுவதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்... மேலும் பார்க்க

திரிணமூல் காங்கிரஸ் மூத்த எம்எல்ஏ மரணம்

மாரடைப்பால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ நசிருதீன் அகமது மரணமடைந்தார். கலிகஞ்ச் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ நசிருதீன் அகமதுவுக்கு சனிக்கிழமை இரவு 11:50 மணியள... மேலும் பார்க்க

சம்பல் வன்முறை: மேலும் ஒருவர் கைது

சம்பல் வன்முறை தொடா்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஷ் சந்திரா கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர் ககு சராய் பக... மேலும் பார்க்க