பாகிஸ்தான் படங்களுக்கு தடை! ஓடிடி தளங்களுக்கு உத்தரவு!
பாகிஸ்தானின் திரைப்படங்களை ஓடிடி தளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் அடுத்தக்கட்டமாக, பாகிஸ்தானில் தயாரான அல்லது எடுக்கப்பட்ட திரைப்படங்கள், இணையத் தொடர்கள், பாடல்கள் உள்ளிட்டவற்றை நிறுத்துமாறு ஓடிடி நிறுவனங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்ற பெயரில், இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.