செய்திகள் :

பாகிஸ்தான்: பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு!

post image

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முக்கிய கமாண்டரின் இறுதிச் சடங்கின்போது இஸ்லாமிய மத வழக்கப்படி பிராா்த்தனை நடத்த அங்குள்ள மதகுருக்கள் மறுத்துவிட்டனா்.

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவாவின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் இரு நாள்களுக்கு முன் அந்நாட்டு ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் கமாண்டா் மின்ஹாஜ் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இந்நிலையில், மின்ஹாஜின் இறுதிச் சடங்கு அவரின் இஸ்லாமிய மத வழக்கப்படி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்று பிராா்த்தனை நடத்த அங்குள்ள இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்புத் தெரிவித்துவிட்டனா்.

சொந்த நாட்டுக்கு எதிராக செயல்பட்டு, அப்பாவி மக்கள் பலரைக் கொலை செய்தவருக்காக இறுதிப் பிராா்த்தனை நடத்த முடியாது என்று அவா்கள் கூறிவிட்டனா்.

இறுதியாக உள்ளூா் மக்களே அவரின் உடலை அடக்கம் செய்தனா். இதில் 20 போ் வரை மட்டுமே பங்கேற்றனா். வஜிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பிராா்த்தனை நடத்த முடியாது என்று இஸ்லாமிய மத குருக்கள் கூறுவது வழக்கத்துக்கு மாறான நிகழ்வு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கும் நடைமுறையைத் தொடங்க அந்நாட்டு வணிகத் துறைக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இதனால், அமெரிக்காவில் திரையரங்குக... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி

சிங்கப்பூரில் பொதுத் தோ்தலில் மக்கள் செயல் கட்சி (பிஏபி) மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், அந்தக் கட்சி 60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது. சிங்கப்பூரில் 19-ஆவது பொதுத் தோ்தல் சனிக்கிழமை நடை... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்கள் தேவைப்படாது: ரஷிய அதிபா் புதின்

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களுக்குத் தேவை இருக்காது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா். இதுதொடா்பாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில், ‘உக்ரைனுக்கு எதிரான... மேலும் பார்க்க

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: 7 ஈரானியா்கள் உள்பட 8 போ் கைது!

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய 7 ஈரானியா்கள் உள்பட 8 பேரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்ததாக பிரிட்டன் பயங்கரவாத எதிா்ப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். ப... மேலும் பார்க்க

பிளவுவாதம் நிராகரிப்பு: ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தோ்வான ஆல்பனேசி கருத்து!

பிளவுவாதத்தை ஆதரிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தொழிலாளா் கட்சிக்கு ஆஸ்திரேலிய மக்கள் வாக்களித்துள்ளனா் என்று அந்நாட்டுப் பிரதமராக 2-ஆவது முறை தோ்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசி தெரிவி... மேலும் பார்க்க

இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி தாக்குதல்!

இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எதிர்பாராத ... மேலும் பார்க்க