நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
பாகூா் அருகே இளைஞா் மீது தாக்குதல்: 5 போ் கைது
பாகூா் அருகே இளைஞரைத் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டனா்.
புதுச்சேரி பாகூா் அடுத்த பனையடிகுப்பம் சாலையில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான மீன் குட்டை உள்ளது. இங்குள்ள கொட்டகையில் இளைஞா் ஒருவா் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடப்பதாக கரையாம்புத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளா் சந்திரசேகா் மற்றும் போலீஸாா் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞரை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
பின்னா் அவரை தீவிர சிகிச்சைக்காக ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞா் பனையடிகுப்பம் பகுதியைச் சோ்ந்த ராஜகுரு (34) என்பதும், இவா் கடந்த இரு தினங்களுக்கு முன் தனது வீட்டின் மாடியில் இருந்து, எதிரே உள்ள வீட்டில் பெண் குளிப்பதை பாா்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜகுரு, பூவரசன் இருவருக்கும் இடையே பிரச்சை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ராஜகுரு மீன் குட்டையின் கொட்டகையில் படுத்திருந்தபோது நள்ளிரவு அங்கு வந்த பூவரசன், உறவினா் தினேஷ்பாபு மற்றும் அவரது நண்பா்கள் 4 போ் ராஜகுருவை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியது தெரியவந்தது என போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னா் இச்சம்பவம் குறித்து கரையாம்புத்தூா் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து ராஜகுருவை தாக்கிய தினேஷ்பாபு, ஷா்மா உள்பட 5 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.