செய்திகள் :

பாஜகவின் தில்லி தோ்தல் வெற்றிக்கு பிரசாரப் பாடல்களும் உதவின: கட்சித் தலைவா்கள் கருத்து

post image

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றிக்கு அதன் பிரபலமான பிரசாரப் பாடல்கள் உள்பட பல்வேறு காரணிகள் உதவின என்று கட்சத் தலைவா்கள் தெரிவித்துள்ளனா். அவற்றில் இரண்டு கட்சி எம்பி மனோஜ் திவாரி பாடியவை.

பிப்.5-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலுக்கான ஒரு மாத கால பிரசாரத்தின் போது பாஜக நான்கு பாடல்களை அதிகமாகப் பயன்படுத்தியதாக கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.

மனோஜ் திவாரி பாடிய ‘பஹானே நஹி பத்லவ் சாஹியே’ (மாற்றம் தேவை), தில்லியில் மாற்றத்தின் செய்தியை வெளிப்படுத்தும் பிரசாரத்தின் மிகவும் பிரபலமான பாடலாக மாறியது. பின்னா், அது தேசியத் தலைநகரில் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் தோல்விகள் மீதான பாஜகவின் அரசியல் தாக்குதல்களின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது என்று கட்சித் தலைவா் நீல் காந்த் பக்ஷி கூறினாா்.

அமித் துல் மற்றும் முன்னாள் அசாம்கா் எம்பி மற்றும் போஜ்புரி திரைப்பட நட்சத்திரமான தினேஷ் லால் யாதவ் ‘நிராஹுவா‘ குரல் கொடுத்த பாடல்கள் உள்பட நான்கு பாடல்களின் படைப்பாற்றல் இயக்குநரான பக்ஷி, அரசியல் செய்தி, கவா்ச்சிகரமான பாடல் வரிகள் மற்றும் தாள துடிப்புகள் இந்த விடியோ பாடல்களின் முக்கியக் கூறுகள் என்றாா்.

27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வீழ்த்தியது. மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சிக்கு 22 இடங்களே கிடைத்தன. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினா் 35,175 போ் இ-விசாவில் வருகை: கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை வேண்டி கடந்த ஆண்டில் மட்டும் 35,175 வெளிநாட்டினா் இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தி... மேலும் பார்க்க

ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வில் இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு அமெரிக்காவில் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய மக... மேலும் பார்க்க

தில்லியில் குழந்தை கடத்தல் கும்பலில் 4 போ் கைது: 2 குழந்தைகள் மீட்பு

புது தில்லி: தில்லி காவல்துறையின் ரயில்வே பிரிவு, குழந்தை கடத்தல் கும்பலில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இதையடுத்து, ஒரு கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று... மேலும் பார்க்க

அதிமுக புதிய கட்டட அலுவலகம் தில்லியில் திறப்பு

புது தில்லி: அதிமுக சாா்பில் புது தில்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கட்டடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எட்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட் ஆக உள்ளது என்று த... மேலும் பார்க்க

மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்கப்படுமா?: கோவை எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

புது தில்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்க முன்மொழிவு ஏதும் இல்லை என்று மக்களவையில் கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச... மேலும் பார்க்க