செய்திகள் :

பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவிக்கவில்லை: தமிழிசை

post image

பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவா் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.

சென்னை விருகம்பாக்கம் காமராஜா் சலையில் நீா்-மோா் பந்தலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக இதுவரை அதிகாரபூா்வமாக அறிவிக்கவில்லை. குறிப்பாக, அக்கட்சியின் தலைவா் விஜய் இதுவரை எதுவும் கூறவில்லை.

திமுக ஆட்சி அகற்ற வேண்டும் என எண்ணுபவா்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எல்லோரும் ஒன்றுசேர வேண்டிய சூழல் வந்துள்ளது. பாஜக பலம் பொருந்திய கட்சியாக இருக்கிறது. ‘இண்டி’ கூட்டணி வலுவிழந்த கூட்டணியாகத்தான் இருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா். பிரதமா் மோடியை சசிதரூா் உண்மையாக ஆதரிக்கத் தொடங்கிவிட்டாா்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாட்டில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் தமிழக குழந்தைகள் படிக்க வேண்டும் என திமுக நினைக்கிறது என்றாா் அவா்.

அரக்கோணம் மாணவி பாலியல் புகார்: அரசு நடவடிக்கை எடுக்குமா? - இபிஎஸ்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் கொடுமை செய்ததாகவும் தன்னைப் போலவே பல பெண்களை ஏமாற்றியதாகவும் கல்லூரி மாண... மேலும் பார்க்க

வேதாரண்யம் பகுதியில் 3ஆவது நாளாக தொடர்மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம் தெற்கு கடலோரப் பகுதியில் 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவும் நீடித்த தொடர் மழையின் காரணமாக சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் தெற்கு கடலோர... மேலும் பார்க்க

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை!

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக வெள்ளத்தில் சிக்கியவரை மீட்பது போன்ற தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதை ஒட்டி அனைத்து துறை சார... மேலும் பார்க்க

பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்: முதல்வர் ஸ்டாலின்

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலத்தில் திங்கள்க... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது.அதன்படி, சென்னையில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,755க்கும்... மேலும் பார்க்க

சிவகிரி விவசாய தம்பதி படுகொலை: 4 பேர் கைது

சிவகிரி அருகே இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம், சிவகிரியை அடுத்த விளாங்காட்டுவலசு கீழ்பவானி வாய்க்கால் கரை பகுதியில் மேகரையான் தோட்டத்தில் வ... மேலும் பார்க்க