செய்திகள் :

`பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் புனிதம், அதிமுக வைத்தால் பாவமா?' - ஆர்பி உதயகுமார் சொன்ன பின்னணி

post image

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் மறு வடிவம் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க திண்ணை பிரசாரம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கையில் எடப்பாடியார் பேசும்போது, நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜக கூட்டணியில் அதிமுக தொடரும், இல்லையென்றால் விலகிவிடுவோம் என்று சொல்ல தகுதி இருக்கிறதா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதன் மூலம் மகத்தான வெற்றிக் கூட்டணியை அமைத்த எடப்பாடியாரின் வியூகத்தைக் கண்டு முதலமைச்சருக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

ஆர்.பி.உதயகுமார்

மக்களுக்கு சில வரலாற்றை நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம், 1977 ஆம் ஆண்டு அன்றைய பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயை சந்தித்த கருணாநிதி, இந்திரா காந்தி தன் மீது போடப்பட்ட சர்க்காரியா வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, கூட்டணி வேறு, வழக்கு வேறு, நீதிமன்றத்தில் அதை சரி செய்து கொள்ளுங்கள் என்று கூறியதாக அன்றைக்கு செய்திகள் வெளி வந்தது, இதை ஸ்டாலின் மறந்தாரா? அன்றைக்கு இந்த நிபந்தனை வைக்கத்தான் ஜனதா கட்சியுடன் திமுக கூட்டணி வைத்ததா?

எமர்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்த காயம் ஆறாத நிலையில் 1980-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் எந்த நிபந்தனையுடன் திமுக கூட்டணி வைத்தது? அன்றைக்கு மெஜாரிட்டி பலத்துடன், மக்கள் செல்வாக்குடன் இருந்த எம்ஜிஆர் ஆட்சியை கலைக்கும் நிபந்தனையுடந்தான் கருணாநிதி கூட்டணி வைத்தாரா?

ஆர்.பி.உதயகுமார்

பண்டாரம், பரதேசி என்று பாஜகவை விமர்சித்துவிட்டு பின்பு எந்த நிபந்தனைக்காக கூட்டணி வைத்தார்? 2004 -ல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பத்தாண்டு காலம் ஆட்சி, அதிகாரத்தை வைத்துக்கொண்ட திமுக கச்சத்தீவை மீட்டதா? முல்லைப் பெரியாறு, காவிரி போன்ற பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வந்ததா?

இன்றைய சட்டத்துறை அமைச்சரான ரகுபதியை அன்றைக்கு மத்திய உள்துறை இணை அமைச்சராக்க கருணாநிதி வைத்த கோரிக்கை ஏற்கபடாதபோது ஆதரவு கடிதத்தை நிறுத்தி வைத்தார். பின்பு ரகுபதி உள்துறை இணைஅமைச்சர் என்று அறிவித்தவுடன்தான் தனது ஆதரவு கடிதத்தை ஜனாதிபதிக்கு கொடுத்தார். இப்படி திமுக, பதவிகளுக்காக நிபந்தனை வைத்ததே தவிர மக்களுக்காக எப்பொழுதும் கூட்டணியில் நிபந்தனை விதித்தது இல்லை.

ஸ்டாலின்

இன்றைக்கு ஸ்டாலின், அவதார புருஷன் போல, சத்தியவான் போல சட்டசபையில் கேள்வி எழுப்பி, திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் புனிதம், அதிமுக வைத்தால் பாவம் என்று பேசுகிறார். மக்கள் போடும் கணக்கே நியாய கணக்கு, அதை புரிந்து கொண்டு எடப்பாடியார் போட்டது தேர்தல் வெற்றி கணக்கு, திமுக போடுவது வெறும் மனக்கணக்கு.

சட்டசபையில் முதலமைச்சர் பேசியதை பார்க்கும்போது அவருக்கு வந்தால் ரத்தம், நமக்கு வந்த தக்காளி சட்னி என்று சொல்லுவதைப்போல் உள்ளது. இதை நாம் நகைச்சுவையாக கடந்து போக வேண்டும்.

திமுகவின் பேச்சுக்கு மக்கள் முக்கியத்துவம் தரமாட்டார்கள், இதுபோன்று உண்மையை திண்ணைப் பிரசாரம் மூலம் மக்களுக்கு உரக்க செல்ல வேண்டும்" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``சமூகத்தை பிளவுபடுத்த நடத்தப்பட்ட தாக்குதல்..'' - காஷ்மீர் முதல்வரை சந்தித்த ராகுல் காந்தி!

ஜம்மு பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் இந்திய சமூகத்தைப் பிரிப்பதற்காக நடத்தப்பட்டது என்றும், இந்த கீழ்த்தரமான செயலை எதிர்த்துப் போராடவும் தீவிரவாதத்தைத் தோற்கடிக்கவும் நாட்டு மக்கள் ஒற்றுமைய... மேலும் பார்க்க

``காப்பாற்றியவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான்.. பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது'' - மெகபூபா முஃப்தி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீதுதீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 24 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் தாக்கு... மேலும் பார்க்க

``துணை வேந்தர்கள் நள்ளிரவில் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்..'' - ஆளுநர் ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில், ஊட்டியில் இன்று துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்துகொண்டார்.... மேலும் பார்க்க

Indus River: ``சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்கள்?'' -ஒவைசி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூர துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பல தரப்பில... மேலும் பார்க்க

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகியுள்ளது. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உள்ளூர் தீவிரவாதிகள் அடில் தோகர் மற்றும் ஆசிப் ஷேக். இவர்கள்... மேலும் பார்க்க

``பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்கக்கூடாது; ஏனெனில்.." - திருமாவளவன் சொல்வதென்ன?

திருச்சியில் நடைபெறும் திராவிடர் கழகம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்... மேலும் பார்க்க