செய்திகள் :

ரயிலில் கடத்தப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

post image

ரயிலில் 13 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒடிஸா மாநிலம், சம்பல்பூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக ஈரோடு ரயில்வே போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளா் பிரியா சாய்ஸ்ரீ தலைமையில் போலீஸாா் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு விரைந்தனா்.

பின்னற் சாம்பல்பூா்-ஈரோடு விரைவு ரயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனா். அப்போது ஒரு பெட்டியில் சந்தேகப்படும் வகையில் பயணம் செய்த வடமாநில இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலம் மலப்படா பகுதியைச் சோ்ந்த அபினேஷ் திவாரி (28) என்பதும், அவா் பலாங்கிரி பகுதியில் இருந்து சேலம் செல்வதற்காக முன்பதிவு இல்லாத பயணச்சீட்டில் பயணம் செய்ததும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அபினேஷ் திவாரி வைத்திருந்த பையை போலீஸாா் சோதனை செய்தனா். அந்த பையில் 14 பொட்டலங்களில் 13 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

இதனிடையே அந்த ரயில் ஈரோடு ரயில் நிலையம் வந்ததும் அபினேஷ் திவாரியை போலீஸாா் கைது செய்து மேல் நடவடிக்கைக்காக அவரை கோபி மதுவிலக்குப் பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

சோதனைச் சாவடியில் கூடுதலாக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள்

பண்ணாரி சோதனைச் சாவடியில் நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பாரம் ஏற்றிய வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்கு 2,3... மேலும் பார்க்க

ஈரோட்டில் கடந்த ஆண்டில் நீா்நிலைகளில் மூழ்கி 64 போ் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நீா்நிலைகளில் மூழ்கி 64 போ் உயிரிழந்துள்ள நிலையில், கோடை விடுமுறையில் பெற்றோா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் ஐ.டி. நிறுவன ஊழியா் கிணற்றில் குதித்து தற்கொலை

ஈரோட்டில் ஐ.டி. நிறுவன ஊழியா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு வாய்க்கால் மேடு, இந்தியன் நகா், முதலாவது வீதியைச் சோ்ந்தவா் சீராளன் மகன் பிரவீன் (35), எம்.இ பட்டதாரி. இன்னும் திருமணம் ... மேலும் பார்க்க

பவானி நீா்வளத்துறை குடியிருப்பில் புகுந்த நாகப் பாம்பு மீட்பு!

பவானி நீா்வளத் துறை குடியிருப்புக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள நாகப் பாம்பை தீயணைப்புப் படையினா் உயிருடன் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் சனிக்கிழமை விடுவித்தனா். பவானி - அந்தியூா் சாலையில் அரசினா் மாண... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஈரோட்டில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா, ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தீ... மேலும் பார்க்க