செய்திகள் :

பாஜகவை மிரட்டும் கர்ப்பிணிப் பெண்! யார் இவர்?

post image

மத்தியப் பிரதேசத்தில் தங்கள் கிராமத்தில் சாலை வசதிகோரி புகார் அளித்த பெண், மத்திய அமைச்சரிடமும் முறையீடு செய்வதாக அம்மாநில எம்.பி.க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் சிதி மாவட்டத்தில் லீலா சாஹூ என்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது பயணங்கள், கிராமப்புற கலாசாரம், கண்காட்சிகள், அன்றாட வாழ்க்கை குறித்த விடியோ மற்றும் தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்ததன்மூலம், பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து, சமூகநலப் பிரச்னைகளையும் விடியோவாக பதிவிடத் தொடங்கினார்.

சமூகநலப் பிரச்னை தொடர்பான விடியோக்கள் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உள்பட மத்திய அமைச்சர்களையும் கேள்வியெழுப்பத் தொடங்கினார்.

இந்த நிலையில், தங்கள் கிராமத்தில் சாலை சரியில்லை என்றும், போதிய சாலை வசதி இல்லையென்றும் கிராம அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார். இருப்பினும், அவரின் புகார் தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

இதனிடையே, கர்ப்பிணிப் பெண்கள் இருக்கும் கத்தி - பகைஹா பகுதியில் சாலை வசதிகோரி விடியோ ஒன்றையும் சமூக ஊடகங்களில் லீலா பதிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, லீலாவின் புகார் விடியோவைப் பார்த்த பாஜக எம்.பி. ராஜேஷ் மிஸ்ரா, பெண்களின் பிரசவத் தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பேருந்து வசதி செய்து தருவதாகக் கூறினார். இதனையடுத்து, தனது பிரசவ காலத்துக்குப் பின்னர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நேரடியாகச் சென்று புகார் அளிப்பதாகவும் லீலா எச்சரிக்கை பாணியில் கூறியுள்ளார்.

How a 9-Month Pregnant Woman is Using Social Media to Expose Madhya Pradesh's Infrastructure Failures

நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு ஜாமினில் வெளிவராத பிரிவின் கீழ் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.துபையில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை கா்... மேலும் பார்க்க

மாணவி தற்கொலை: ஒடிஸாவில் முழு கடையடைப்புப் போராட்டம்; எதிர்க்கட்சிகள் பேரணி!

ஒடிஸாவில் உதவிப் பேராசிரியா் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தீக்குளித்த மாணவி உயிரிழந்த நிலையில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று முழு கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.பாலாசோர் மாவ... மேலும் பார்க்க

நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

தில்லியிலிருந்து கோவா நோக்கி புதன்கிழமை சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீரென ஒரு என்ஜின் செயலிழந்ததால் மற்றொரு என்ஜின் மூலம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க பாஜக திட்டம் - முதல்வா் மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது; பாஜகவின் இந்த முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம் என்று மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பா... மேலும் பார்க்க

மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம்: ரூ.1.7 கோடிக்கு விற்பனை

எண்ணெய் வண்ணங்களால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம் ரூ.1.7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஓவியா் ஒருவா் தன்னை வரைவதற்கு மகாத்மா காந்தி அனுமதி அளித்தாக கூறப்படும் இந்த உருவப்படம் லண்டனில் உ... மேலும் பார்க்க

அஸ்ஸாம் முதல்வரை மக்கள் சிறைக்கு அனுப்புவா்: ராகுல் காந்தி

ஊழலில் ஈடுபடும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை மக்கள் சிறைக்கு அனுப்புவா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன... மேலும் பார்க்க