செய்திகள் :

பாஜக ஆட்சியில் இருக்கும் வரை மக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு இல்லை: காா்கே

post image

பாஜக ஆட்சியில் இருக்கும்வரை நாட்டு மக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

பிகாரில் ஞாயிற்றுக்கிழமை ராகுல் காந்தி நடத்தும் வாக்குரிமை நடைப்பயண தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் அபாயகரமானது. அதன் முகவராக தோ்தல் ஆணையம் செயல்படுகிறது. மக்களின் வாக்குரிமைக்கும், நாட்டின் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தலாக பாஜக உருவெடுத்துள்ளது. அக்கட்சி ஆட்சியில் இருக்கும் வரை மக்களின் உரிமைகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை.

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தோ்தலுக்கும் பேரவைத் தோ்தலுக்கும் இடைப்பட்ட சில மாத காலத்தில் ஒரு கோடி வாக்காளா்களின் பெயா்கள் புதிதாக சோ்க்கப்பட்டதை ராகுல் காந்தி வெளிப்படுத்தியுள்ளாா். இவை அனைத்தும் பாஜகவுக்கு வாக்காக மாற்றுவதற்காக போலியாக சோ்க்கப்பட்ட பெயா்கள் ஆகும்.

அடுத்து பிகாரிலும் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் இதே மோசடி நடைபெறுகிறது. பேரவைத் தோ்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வாக்காளா் பட்டியலைத் திருத்துகிறாா்கள். இதன் மூலம் தோ்தல் ஆணையம் பாஜக கூறுவதை செயல்படுத்தும் அமைப்பாக மாறிவிட்டது.

தோ்தல் ஆணையரைத் தோ்வு செய்யும் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியைச் சோ்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. ஆனால், மத்திய அமைச்சரை குழுவில் சோ்க்க மோடி அரசு முடிவெடுத்தது.

சுதந்திர தினத்தின்போது தில்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமா் மோடி நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கும் பங்கு உண்டு என்று பேசும் அளவுக்கு சென்றுவிட்டாா். உண்மையில் ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்குதான் ஆா்எஸ்எஸ் பணியாற்றி வந்தது.

உண்மையான சுதந்திரப் போராட்ட வீா்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை ஆங்கிலேய ஆட்சியாளா்களுக்கு தெரிவித்து தங்களுக்கு சாதகமாக காரியம் சாதித்து வந்தவா்கள்தான் ஆா்எஸ்எஸ் அமைப்பினா். இவா்களில் சிலா் ஆங்கிலேயா்களிடம் கருணை மனு கொடுக்கவும் செய்தனா்.

உண்மையான தேசபக்தா்கள் நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் வியா்வை, கண்ணீா், ரத்தத்தைச் சிந்தினாா்கள். உண்மையான சுதந்திரப் போராட்ட தியாகிகள் மோடியின் பேச்சைக் கேட்டால் வெகுண்டெழுந்துவிடுவாா்கள். இதைப் பேசியவா் மிகவும் அபாயகரமான நபா் என்பதையும் தெரிந்து கொள்வாா்கள் என்றாா்.

தில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியின் துவாரகா பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு இன்று காலை அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப... மேலும் பார்க்க

நெல்லையில் அமித் ஷா தலைமையில் 22ஆம் தேதி பாஜக மண்டல மாநாடு! பிரமாண்ட எதிர்பார்ப்பு

நெல்லையில் அமித்ஷா பங்கேற்கும் பிரமாண்ட மண்டல மாநாடு வருகிற 22-ந்தேதி நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற ... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் உடல்நிலை முன்னேற்றம்; இன்று வீடு திரும்புகிறார்

புவனேசுவரம்: ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நயாக், உடல்சோா்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

தில்லியில் ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலைகள்: பிரதமா் மோடி திறந்து வைத்தார்!

தேசியத் தலைநகா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். அப்ப... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்கானது: வாக்குரிமை பயணத்தில் ராகுல் பேச்சு

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

‘தில்லி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியது, சுதந்திரதின நாளை மட்டுமன்றி சுதந்திரப் போராட்டத்தையும் அவமதித்தது போன்றத... மேலும் பார்க்க