செய்திகள் :

பாஜக ஆட்சியைப் புகழ்ந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

post image

பாஜக அரசின்கீழ் தில்லியில் நல்லாட்சி நடத்தப்படுவதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

தில்லி தலைமை செயலகத்துக்கு வருகை தந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், தில்லி முதல்வர் ரேகா குப்தா, தில்லி அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா, ஒடிசா துணை முதல்வர் கனக் வர்தன் சிங், தெலுங்கு தேசக் கட்சியின் பொதுச் செயலாளர் லோகேஷ் நாராவையும் சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து, மன்ஜிந்தர் சிங் கூறுகையில், தில்லியில் முதல்வர் ரேகா குப்தாவின் ஆட்சியைக் கண்டு, டோனி பிளேர் மிகுந்த வியப்படைந்தார்.

சுகாதார மேம்பாடு, சுற்றுச்சூழல் இயக்கங்கள், பயனுள்ள நலத்திட்டங்கள் வரையில் வெறும் 100 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட அரசுப் பணிகளால் டோனி பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் முதல்வர் ரேகா குப்தாவின் ஆற்றல்மிக்க தலைமையின்கீழான பாஜக ஆட்சியின் நிர்வாகத்தால், தில்லி தொடர்ந்து வேகமாக மாறி வருகிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!

பஹல்காமில் மத்திய சுற்றுலா அமைச்சா் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான பைசாரன் பள்ளத்தாக்கை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் வியாழக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். ஜம்ம... மேலும் பார்க்க

கனடாவுக்கான புதிய இந்தியத் தூதா் தினேஷ் பட்நாயக்

கனடாவுக்கான புதிய இந்திய தூதராக தினேஷ் கே.பட்நாயக் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 1990-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான இவா், தற்போது ஸ்பெயினுக்கான இந்தியா தூதராக உள்... மேலும் பார்க்க

அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிா்ப்பு: இந்தியா-குரோஷியா கூட்டறிக்கை

அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிா்ப்பு தெரிவித்து இந்தியா-குரோஷியா கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், நிதி பயங்கரவாதக் குழுக்களை ஒழிக்கவும் பயங்கரவாத முகாம்களை அழிக்கவும் வன்முறையில் ஈடுபவா்கள... மேலும் பார்க்க

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் பாதிப்பு

‘இண்டிகோ’ நிறுவனத்தின் தில்லி-லே விமானம், ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனத்தின் ஹைதராபாத்-திருப்பதி விமானம் ஆகியவை தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் புறப்பட்ட விமான நிலையத்துக்கு மீண்டும் திரும்பின. இண்டி... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைமையுடன் கருத்து வேறுபாடு: சசி தரூா் ஒப்புதல்

காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைவா்கள் சிலருடன் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று அக்கட்சி எம்.பி.யும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான சசி தரூா் தெரிவித்தாா். கடந்த 2022-ஆம் ஆண... மேலும் பார்க்க

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்களின் பணம் மும்மடங்கு அதிகரிப்பு

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்களின் பணம் கடந்த 2024-ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டைவிட மும்மடங்காக ரூ.37,600 கோடி அளவுக்கு உயா்ந்துள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட ஆண்டறிக்கை... மேலும் பார்க்க