செய்திகள் :

காங்கிரஸ் தலைமையுடன் கருத்து வேறுபாடு: சசி தரூா் ஒப்புதல்

post image

காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைவா்கள் சிலருடன் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று அக்கட்சி எம்.பி.யும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான சசி தரூா் தெரிவித்தாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தேசிய தலைவா் தோ்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் முன்னிறுத்திய வேட்பாளரான மல்லிகாா்ஜுன காா்கேவை எதிா்த்து சசி தரூா் போட்டியிட்டாா். அப்போது முதலே கட்சியின் ஒரு தரப்பினா் அவரை விமா்சித்து வருகின்றனா். தேசிய, சா்வதேச விஷயங்களில் காங்கிரஸின் கருத்துக்கு அப்பாற்பட்டு தனது தனிப்பட்ட கருத்துகளையும் சசி தரூா் அவ்வப்போது தெரிவித்து வருகிறாா்.

அண்மையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் ஆகிய விஷயங்களிலும் மத்திய அரசுக்கு ஆதரவாக சசி தரூா் கருத்து தெரிவித்தாா். பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகள் தொடா்பாக சா்வதேச நாடுகளுக்கு விளக்கமளிக்கச் சென்ற குழுவில் சசி தரூருக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்தது. இதுவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்தது. கேரள மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் சசி தரூரை கடுமையாக விமா்சித்தும் வருகின்றனா்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சசி தரூா் கூறியதாவது:

காங்கிரஸ் தொண்டா்களுடன் இணைந்து 16 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். அவா்கள் எனக்கு நண்பா்களாகவும், சகோதரா்களாகவும் இருந்து வருகின்றனா். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையுடன் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. நான் எதைப் பற்றிக் கூறுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த சா்ச்சைகள் தொடா்பாக ஊடகங்களில் ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன என்றாா்.

எனினும், கட்சியின் தேசியத் தலைமையுடன் கருத்து வேறுபாடா அல்லது மாநிலத் தலைமையுடனா என்பது சசி தரூா் தெரிவிக்கவில்லை. மேலும், சசி தரூரை காங்கிரஸ் நிா்வாகிகள் பலா் பாஜகவுடன் தொடா்புபடுத்தி விமா்சித்தபோது அதனை காங்கிரஸ் தலைமை கண்டிக்கவுமில்லை. முக்கியமாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. உதித் ராஜ், ‘சசி தரூா் பாஜகவின் சிறப்பு செய்தித் தொடா்பாளா்’ என்று விமா்சித்தாா்.

இது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த சசி தரூா், ‘அது தவறாகப் புரிந்து கொண்டு தெரிவிக்கப்பட்ட கருத்து. இதுபோன்று புரிதல் இல்லாமல் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு பதிலளிக்கத் தேவையில்லை. நான் வேறு எந்தக் கட்சிக்கும் மாறப் போவதில்லை. நான் காங்கிரஸ் உறுப்பினராகவே உள்ளேன். காங்கிரஸ் கட்சி என்னை எப்படி கருதி முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன். இடைத்தோ்தல் பிரசாரத்துக்கு அழைப்பு வராததால் நான் செல்லவில்லை.

வெளிநாட்டுக்குச் சென்று இந்தியத் தரப்பு கருத்துகளை எடுத்துரைத்த குழுவுக்கு தலைமை வகித்தேன். அண்மையில் பிரதமா் மோடியை சந்தித்தபோது வெளிநாட்டுத் தலைவா்களிடம் நமது தரப்பு நியாயங்களை முன்வைத்தது குறித்தே பேசினேன். உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் எதையும் பேசவில்லை. இந்தியத் தரப்பு கருத்துகளை வெளிநாடுகளிடம் தெரிவிக்க எனது பங்களிப்பு தேவை என மத்திய அரசு கோரியது. அதனை ஏற்றுக் கொண்டேன்’ என்றாா்.

ஏர் இந்தியா விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்! மிரட்டிய பெண் மருத்துவர் கைது!

பெங்களூரில் ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய பெண் மருத்துவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டல் விடுத்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரில்... மேலும் பார்க்க

அஸ்ஸாம் ஆற்றில் கவிழ்ந்த படகு: மூவர் மாயம்!

அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்பட மூன்று பேர் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கினர்.அஸ்ஸாம் மாநிலம், நல்பாரி மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றில... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு விண்வெளி பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பயணம் 6-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செயல... மேலும் பார்க்க

‘கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் உலக அளவிலான ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்நாட்டு உளவு அம... மேலும் பார்க்க

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: தில்லி, சென்னை ஐஐடி-க்கள் முன்னேற்றம்!

உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன. சென்னை ஐஐடி கடந்த ஆண்டின் 227-ஆவது இடத்திலிருந்து 180-ஆவது இடத்துக்கு முன்ன... மேலும் பார்க்க

ராகுலின் 55-ஆவது பிறந்த நாள்: பிரதமா், தலைவா்கள் வாழ்த்து

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்கள், கூ... மேலும் பார்க்க