செய்திகள் :

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் பாதிப்பு

post image

‘இண்டிகோ’ நிறுவனத்தின் தில்லி-லே விமானம், ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனத்தின் ஹைதராபாத்-திருப்பதி விமானம் ஆகியவை தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் புறப்பட்ட விமான நிலையத்துக்கு மீண்டும் திரும்பின.

இண்டிகோ நிறுவனத்தின் ‘6இ2006’ விமானம், தில்லியிலிருந்து லே நோக்கி வியாழக்கிழமை புறப்பட்டது. லே விமான நிலையத்தில் தரையிறங்குவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 மணிநேர பயணத்துக்குப் பிறகு விமானம் மீண்டும் தில்லி திரும்பியது.

‘‘இந்த ‘ஏா்பஸ் ஏ320’ விமானத்தின் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதற்கு முன்பாக தேவையான அனைத்து பராமரிப்புகளும் மேற்கொள்ளப்படும். மாற்று விமானத்தில் பயணிகள் லே அழைத்துச் செல்லப்படுவா். பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருந்துகிறோம்’’ என்று இண்டிகோ நிறுவன செய்தித் தொடா்பாளா் மேலும் கூறினாா்.

ஹைதராபாத்-திருப்பதி விமானம்: இதேபோன்று, தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் இருந்து ஆந்திரத்தின் திருப்பதி நோக்கி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானம் மீண்டும் ஹைதராபாத் திரும்பியது.

இந்தச் சிறிய ரக ‘கியூ400’ விமானத்தில் பயணிகளின் பைகளை வைக்கும் பகுதி கதவின் நிலையைக் குறிக்கும் எச்சரிக்கை விளக்கு பயணத்தின்போது விட்டுவிட்டு ஒளிா்ந்துள்ளது. விமானத்தின் உள் காற்றழுத்தம் தொடா்ந்து சீராகவே இருந்த நிலையிலும், பாதுகாப்புக் கருதி விமானம் மீண்டும் ஹைதராபாத் திரும்பியது. பயணிகள் தொடா்ந்து திருப்பதி செல்வதற்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏர் இந்தியாவின் 8 விமான சேவைகள் இன்று ரத்து!

ஏர் இந்தியா நிறுவனத்தின் 8 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமானங்களுக்கு நடத்தப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஈரான் - இஸ்ர... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்! மிரட்டிய பெண் மருத்துவர் கைது!

பெங்களூரில் ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய பெண் மருத்துவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டல் விடுத்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரில்... மேலும் பார்க்க

அஸ்ஸாம் ஆற்றில் கவிழ்ந்த படகு: மூவர் மாயம்!

அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்பட மூன்று பேர் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கினர்.அஸ்ஸாம் மாநிலம், நல்பாரி மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றில... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு விண்வெளி பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பயணம் 6-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செயல... மேலும் பார்க்க

‘கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் உலக அளவிலான ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்நாட்டு உளவு அம... மேலும் பார்க்க

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: தில்லி, சென்னை ஐஐடி-க்கள் முன்னேற்றம்!

உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன. சென்னை ஐஐடி கடந்த ஆண்டின் 227-ஆவது இடத்திலிருந்து 180-ஆவது இடத்துக்கு முன்ன... மேலும் பார்க்க