செய்திகள் :

பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் தொகுதி மறுசீரமைப்பு! - டி.கே. சிவகுமார் பேச்சு

post image

பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் தொகுதி மறுசீரமைப்பு என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியுள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி , கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிக்க | நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

கூட்டத்தில் பேசிய கர்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமார்,

"அரசியலமைப்பைக் காக்கவும் ஜனநாயகத்தைக் காக்கவும் பல்வேறு மாநிலத் தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளோம். தென் மாநிலங்களின் உரிமையைக் காக்க அனைவரும் தொடர்ந்து பயணிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான இந்த கூட்டம் வரலாற்றுப் போராட்டமாக இருக்கும்.

தென்னிந்திய மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு இன்று மத்திய அரசு துரோகம் இழைக்கிறது. இது அநியாயமானது. இதனால் தென் மாநிலங்கள் அரசியல் பிரதிநித்துவத்தை இழக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க | மணிப்பூரின் நிலை நமக்கு ஏற்படலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தொகுதி மறுவரையறை நிறுத்தி வைக்கப்படும் என்று மத்திய அரசு இதுவரை கூறவில்லை. பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் இது. கூட்டாட்சித் தத்துவம் காக்கப்பட வேண்டும். நமது உரிமைகள், அடையாளம் காக்கப்பட வேண்டும். அதை உறுதி செய்வதற்கான கூட்டம்தான் இது.

இது வடக்கு - தெற்கு இடையேயான போர் கிடையாது. 'மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா' என்ற தத்துவத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம். மறுசீரமைப்பு நடவடிக்கை மக்களவைத் தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல. கூட்டாட்சியின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது.

அனைவரும் ஒன்றிணைந்தது தொடக்கம்தான். ஒன்றாக இணைந்து விவாதித்தால் அது முன்னேற்றம். அதுவே ஒன்றாக வேலை செய்தால் அது வெற்றி.

மாநிலங்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றாகப் பயணித்து வெற்றி பெறுவோம்" என்றார்.

இதையும் படிக்க | ஹைதராபாத்தில் அடுத்த கூட்டம்! - ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

அரசியல் கட்சிகளுடன் இன்று தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை!

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்தும் பொருட்டு, அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா். தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத... மேலும் பார்க்க

பேரவை மீண்டும் இன்று கூடுகிறது!

விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை மீண்டும் திங்கள்கிழமை (மாா்ச் 24) கூடவுள்ளது. பேரவைக் கூட்டத்தில் பல்வேறு துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கவுள்ளது. 2025-26-ஆம் ஆண்டுக்கான நி... மேலும் பார்க்க

தமிழகத்தின் மீது அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை: டி.கே.சிவகுமாா்

தமிழகத்தின் மீது பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை என்று கா்நாடக மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறினாா். சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி மறு... மேலும் பார்க்க

பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ்-க்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அஞ்சலி

தியாகிகள் தினத்தையொட்டி, சுதந்திரப் போராட்ட தியாகிகள் பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு ஆளுநா் ஆா். என். ரவி அஞ்சலி ஞாயிற்றுக்கிழமை செலுத்தினாா். இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியி... மேலும் பார்க்க

ரமலான்: குமரி, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருச்சி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்தில் இருந்து மா... மேலும் பார்க்க

திமுக நடத்தும் அநாகரிக அரசியலுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: பாஜக

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, அண்ணாமலைக்கு எதிராக திமுக நடத்தும் அநாகரிய அரசியலுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவாா்கள் என தமிழக பாஜக செய்தி தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளாா்.இது குறித்து ... மேலும் பார்க்க