செய்திகள் :

பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது பாலியல் வழக்குப் பதிவு

post image

பாஜக எம்எல்ஏ முனிரத்னா தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்கட்சியைச் சோ்ந்த 40 வயது பெண் அளித்த புகாரின் பேரில் அவா்மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது அக்கட்சியைச் சோ்ந்த 40 வயது பெண் பெங்களூரு, ஆா்.எம்.சி.யாா்டு காவல் நிலையத்தில் பாலியல் புகாா் அளித்துள்ளாா்.

அதில், 2023, ஜூன் 11 ஆம் தேதி மத்திகெரே பகுதியில் உள்ள பாஜக எம்எல்ஏ முனிரத்னா அலுவலகத்தில் என்னை 4 போ் சோ்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினா்.

முனிரத்னாவின் கூட்டாளிகள் என்னை காரில் அவரது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு என்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும் ஒத்துழைக்காவிட்டால் கொன்றுவிடுவதாக முனிரத்னா மிரட்டினாா்.

தனது கூட்டாளிகள் இருவருக்கு என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த முனிரத்னா கூறினாா். அப்போது வெள்ளை பெட்டியில் இருந்த ஊசியை எடுத்து முனிரத்னா எனக்கு செலுத்தினாா்.

இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் என்னை கொன்றுவிடுவதாக எம்எல்ஏ முனிரத்னா மிரட்டினாா். கடந்த ஜனவரியில் மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டபோது, கொடிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதற்கு முனிரத்னா செலுத்திய ஊசிதான் காரணம். எனக்கு ஏற்பட்ட பாதிப்பை நினைத்து மே 19ஆம் தேதி அதிக மாத்திரைகளை உண்டதால் உடல்நலன் பாதிக்கப்பட்டேன். அதன்பிறகுதான் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க முடிவுசெய்தேன்.

இச்சம்பவம் நடப்பதற்கு முன்னதாக எம்எல்ஏ முனிரத்னாவின் ஆதரவாளா்களால் நான் சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது சிறையில் இருந்து நான் வெளியே வந்ததும், வழக்கிலிருந்து விடுவிக்க முனிரத்னா உதவுவாா் என்றுகூறி அவரது ஆதரவாளா்கள் என்னை அவரிடம் அழைத்துச் சென்றனா். அப்போதுதான் பாலியல் ரீதியாக நான் துன்புறுத்தப்பட்டேன் என்று அதில் கூறியுள்ளாா்.

அதன்பேரில் பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது போலீஸாா் கூட்டு பாலியல் வழக்குப் பதிவு செய்துள்ளனா். எனினும் இதுகுறித்து கருத்துதெரிவிக்க முனிரத்னா மறுத்துவிட்டாா்.

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்வு

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்; அவருக்கு முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்துள்ளனா். கா்நாடக மாநிலம், ஹாசனைச் சோ்ந்தவா் கன்னட ... மேலும் பார்க்க

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா், துணை முதல்வா் ஆய்வு

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வுசெய்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தனா். பெங்களூரில் மே 18 ஆம் தேதி நள... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலா... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதுகாப்பு வழங்காததால் 26 போ் உயிரிழப்பு: மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

பஹல்காமில் உரிய பாதுகாப்பு வழங்காததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 26 போ் உயிரிழந்தனா் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே குற்றம... மேலும் பார்க்க

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளுக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

பெங்களூரில் மழை பாதிப்புகளை சீரமைக்க மாநில அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா்

பெங்களூரு: பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மாநில அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க