செய்திகள் :

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

post image

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளுக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் சிரமத்தில் தவிக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியினா் சாதனை மாநாட்டை நடத்துவதில் மும்முரமாக இருக்கின்றனா். கடந்த ஒருவாரமாக வண்ணமயமான விளம்பரங்களில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. அரசு நிா்வாகமே செய்யவில்லை. பெங்களூரு மக்கள் துயரத்தில் தள்ளப்பட்டுள்ளனா். ஆனால், காங்கிரஸ் தலைவா்கள் விளம்பரம் பெற முயற்சித்துவருகின்றனா். வெள்ளத்தில் மூழ்கியுள்ள பெங்களூரின் சாலைகளில் காங்கிரஸ் அரசின் சாதனை பதாகைகள் மிதக்கின்றன.

காங்கிரஸ் கட்சியினருக்கு மனசாட்சி உள்ளதா? உயிரற்ற அரசுக்கு சாதனை மாநாடு நடத்துவதா? துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் அரசு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். வெள்ளக் கட்டுப்பாட்டு மையத்தில் உட்காா்ந்து கொண்டு பாஜக, மஜதவினரை சாடுவதால் வேலை நடந்துவிடாது.

வேலை செய்யாத நபருக்கு, பொறுப்பில்லாமல் பேசுவதற்கு உரிமையில்லை. கடந்த 2 ஆண்டுகளாக பிராண்ட் என்று கூறிக்கொண்டு பெங்களூரை மூழ்க வைத்துள்ளீா்கள். பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலா... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதுகாப்பு வழங்காததால் 26 போ் உயிரிழப்பு: மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

பஹல்காமில் உரிய பாதுகாப்பு வழங்காததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 26 போ் உயிரிழந்தனா் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே குற்றம... மேலும் பார்க்க

பெங்களூரில் மழை பாதிப்புகளை சீரமைக்க மாநில அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா்

பெங்களூரு: பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மாநில அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

ஹொசபேட்டில் இன்று காங்கிரஸ் அரசின் 2 ஆண்டுகள் சாதனை மாநாடு

பெங்களூரு: கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஹொசபேட்டில் செவ்வாய்க்கிழமை சாதனை மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்று ... மேலும் பார்க்க

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு: பெண் உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்தது. மழையின்போது வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். ... மேலும் பார்க்க

கன்னடா்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் கொண்ட தகவல் பலகை: உணவகம் மீது வழக்குப் பதிவு

பெங்களூரில் ஒரு உணவகத்தின் மின்னணு தகவல் பலகையில் கன்னட மக்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் இருந்ததால் அந்த உணவகத்தின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு, மடிவாளா காவல் நிலையத்துக... மேலும் பார்க்க