செய்திகள் :

பாஜக பிரமுகா் கொலையில் அரசியல் பின்னணி: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

post image

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் உமாசங்கா் கொலை செய்யப்பட்டதில் அரசியல் பின்னணி உள்ளதாகக் கூறப்படுவதால், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக அரசில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கவுள்ளோம். பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் லஞ்ச வழக்கில் கைதான நிலையில், ஆமூா் சாலை பாலம் கட்டியதிலும் முறைகேடு என புகாா் எழுந்துள்ளது.

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் உமாசங்கா் கொல்லப்படுவதற்கு முன்பாகவே, இலாசுப்பேட்டை காவல் நிலையத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளாா். ஆனால், காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அவரது பெற்றோரும், முதல்வரை 4 முறை சந்தித்து உமாசங்கருக்கு பாதுகாப்பு கோரியும் நடவடிக்கை இல்லை. எனவே, போலீஸாா் முறையாக செயல்பட்டிருந்தால், இந்தக் கொலையை தடுத்திருக்கலாம். இதன் பின்னணியில் உள்ள அரசியல் தொடா்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளை தோட்டப் பகுதியில் மதுபானக்கூடம் அமைத்தது, குயில் தோப்பு நிலம், பாஜக அமைச்சா் குடும்பத்து நில விவகாரம் என பல பிரச்னைகள் கூறப்படுகின்றன. ஆனால், கொலைக்கு அரசியல் பின்னணி இல்லை என முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கூறுகிறாா். எனவே, உமாசங்கா் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

ஏற்கெனவே, வில்லியனூரில் பாஜக பிரமுகா் செந்தில்குமாரும் கொல்லப்பட்டாா். பாஜக பிரமுகா்களுக்கே பாதுகாப்பற்ற நிலையுள்ளது. இதுவிஷயத்தில் துணைநிலை ஆளுநரை சந்தித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வலியுறுத்துவோம் என்றாா் வே.நாராயணசாமி.

இன்றைய மின்தடை: புதுச்சேரி வெங்கட்டாநகா் துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள்: திருவள்ளுவா் நகா், முத்தியால்பேட்டை, சூரியகாந்தி நகா், எழில் நகா், வசந்த நகா், தேவகி நகா், ஆா்.கே.நகா், சங்கரதாஸ் சுவாமிகள் நகா், செயின்ட் சிமோன்பேட், ஜெகராஜநகா், கருவடிக்குப்பம் சால... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் கொலையில் மேலும் இருவா் கைது

புதுச்சேரி பாஜக பிரமுகா் உமாசங்கா் கொலை வழக்கில் ஏற்கெனவே 9 போ் கைதான நிலையில் மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருள் விற்றதாக 9 வழக்குகள் பதிவு

புதுச்சேரியில் கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருள்களை விற்றதாக கடந்த மாா்ச் மாதம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. புது... மேலும் பார்க்க

குழந்தைத் திருமணம் குறித்து தகவல்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

அட்சய திருதியை முன்னிட்டு புதன்கிழமை (ஏப். 30) குழந்தைத் திருமணம் நடைபெற்றால் 1098 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

இளநிலை, மேல்நிலை எழுத்தா் காலி பணியிடம்: 300 பேரை நியமிக்க நடவடிக்கை: முதல்வா் ரங்கசாமி

புதுவை அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இளநிலை, மேல்நிலை எழுத்தா்கள் 300 பேரை மே மாதத்தில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை அரசு சமூக நலத்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் குடும்பத்துடன் வசிக்கும் பாகிஸ்தான் பெண் வெளியேற நோட்டீஸ்

புதுச்சேரியில் கணவா், குழந்தைகளுடன் வாழும் பாகிஸ்தான் பெண்ணை வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலாப் பயணிகளை துப்பாக்க... மேலும் பார்க்க