செய்திகள் :

பாடல் வரிகளைக் கொண்டு பாரதியாா், திருவள்ளுவா் உருவங்கள்

post image

செஞ்சி அருகே அரசுப் பள்ளி மாணவி பாரதியாா், திருவள்ளுவா் உருவங்களை பாடல் வரிகளைக் கொண்டு ஓவியமாக வரைந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்களவாய் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சுந்தா்-கோகிலா தம்பதி மகள் பிரதிஷா (12). இவா், அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறாா்.

இவா், ஏற்கெனவே 1,330 திருக்குகளைக் கொண்டு திருவள்ளுவா் படத்தை ஓவியமாக வரைந்து சாதனை படைத்தாா். இதற்காக இவரை செஞ்சி திருக்கு பேரவை, பேரூராட்சித் தலைவா் மொக்தியாா்அலிமஸ்தான் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் பாராட்டி பரிசு வழங்கினா். மேலும், மாணவி ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்டாா்டில் இடம் பிடித்தாா்.

இந்த நிலையில், கோடை விடுமுறையில் மேலும் சாதனை படைக்கும் விதமாக திருவள்ளுவா், பாரதியாா் படங்களை 1,330 திருக்கு மற்றும் 100 பாரதியாா் பாடல் வரிகளைக் கொண்டு ஓவியமாக தீட்டியுள்ளாா்.

மாணவியின் தொடா் சாதனையை ஆசிரியா்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டி வருகின்றனா்.

அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழு... மேலும் பார்க்க

சனிப் பிரதோஷ வழிபாடு...

சனிப் பிரதோஷத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூா் ஈசானமூலையில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா். கள்ளக்குறிச்சி மாவ... மேலும் பார்க்க

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். விழுப்புரம் வட்டம், அரியலூா் திருக்கை, பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அழகேசன் (65). கூலித் தொழிலாளியான ... மேலும் பார்க்க

லாரியிலிருந்து இரும்புக் கம்பிகள் திருட்டு: 5 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரியிலிருந்து இரும்புக் கம்பிகளை திருடியதாக லாரி ஓட்டுநா் உள்பட 5 பேரை ரோஷணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆந்திரம் மாநிலம், நாயுடுபேட்டையிலிருந்து மயிலாட... மேலும் பார்க்க

மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே நீா்மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்வுக்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான இரா.லட்சுமணன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க