செய்திகள் :

பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல்களின் உடல்கள் மீட்பு!

post image

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் என்கவுன்டரில் பலியான 3 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 3 நக்சல்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் ரூ. 25 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சலான சுதிர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மற்ற மூவரை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்பகுதியிலிருந்து இன்சாஸ் ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதில் பலியாகும் நக்சல்களின் உடல்கள் மீட்கப்படுவது அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலை மேற்கொண்ட பாதுகாப்புப் படையினரை சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு டியோ சாய் பாராட்டியுள்ளார். மேலும், துணை முதல்வர் விஜய் ஷர்மா, நக்சல்களின் அச்சுறுத்தலில் இருந்து தங்களை மீட்போம் என அரசு உறுதியளித்துள்ளதாகவும் இதற்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக, சத்தீஸ்கரில் கடந்த 2023 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து கடந்த ஓராண்டில் 2,619 நக்சல்கள் கைது செய்யப்பட்டு, சரணடைந்தும் கொல்லப்பட்டுமுள்ளதாக மார்ச் 21 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

மேலும், கடந்த வாரம் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட இரு வேறு தாக்குதல்களில் கொல்லப்பட்ட 30 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டதுடன் மிகப் பெரியளவிலான ஆயுதக் குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:இந்தியா - வங்கதேச எல்லையில் கடத்தப்படும் கால்நடைகள்!

48 ஆண்டுகள் மரண தண்டனைக் கைதிக்கு ரூ.12 கோடி இழப்பீடு!

ஜப்பான் நாட்டில் 48 ஆண்டுகளாக மரண தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபருக்கு சுமார் ரூ.12 கோடி இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ஐவாவோ ஹக்காமாட... மேலும் பார்க்க

மார்ச் 29(சனிக்கிழமை) ரேஷன் கடைகள் செயல்படும்!

வருகிற மார்ச் 29 ஆம் தேதி(சனிக்கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம்போல செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:"பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ச... மேலும் பார்க்க

ஹமாஸ் படைகளுக்கு எதிராக போராடும் பாலஸ்தீனர்கள்?

காஸா பகுதியில் போருக்கு எதிரான போராட்டத்தில் ஹமாஸ் படையினருக்கு எதிராக பாலஸ்தீனர்கள் முழக்கங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகின்றது.காஸாவின் வடக்கு நகரமான பெயிட் லஹியாவில் போரில் சேதாரமடைந்த கட்டட இடிபாடுக... மேலும் பார்க்க

'சிங்கார சென்னை' புதிய பயண அட்டை அறிமுகம்!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிமற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து வழங்கும் 'சிங்கார சென்னை' பயண அட்டையை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் சென்றுவருவதற... மேலும் பார்க்க

ஸ்லோவாக்கியாவில் பரவும் தொற்று! மீட்புப் பணியில் செக் குடியரசு வீரர்கள்!

ஸ்லோவாக்கியாவில் வேகமாக பரவி வரும் கால்நடை தொற்றைக் கட்டுப்படுத்த செக் குடியரசு நாட்டின் வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ஸ்லோவாக்கியா நாட்டிலுள்ள மூன்று பண்ணைகளின் கால்நடைகளுக்கு கடந்... மேலும் பார்க்க

தென் கொரியா காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு! 27,000 பேர் வெளியேற்றம்!

தென் கொரியா நாட்டில் பரவிய காட்டுத் தீயினால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. தென் கொரியா நாட்டின் தெற்குப் பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலையாலும் மற்றும் வீசும் பலத்த காற்றினாலும் தொடர்ந்து ... மேலும் பார்க்க