செய்திகள் :

பாதுகாப்பு கோரி நரிக்குறவா் பெண்கள் மனு

post image

திருவள்ளூா் அருகே நரிக்குறவா் காலனியில், கடனுக்கு அதிக வட்டி கேட்டு தகராறு செய்பவா்கள் மீது போலீஸில் புகாா் அளித்தும், நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டோா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இது குறித்து அவா்கள் அளித்த மனு: கடம்பத்தூா் ஒன்றியம், அதிகத்தூா் ஊராட்சியில் நரிக்குறவா் காலனியில் 50-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். ஜோதிராஜ் மனைவி ஆஷா என்பவா், ஷீலாவிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20,000 கடனாக வாங்கினாராம். ஆஷாவின் கணவா் ஜோதிராஜ் பிரிந்து சென்ற நிலையில், தற்போது ஷீலா கொடுத்த கடனுக்கு அதிக வட்டி கேட்டு ஆஷாவிடம் தகராறு ஈடுபட்டராம்.

இந்த நிலையில், இளைஞா்கள் சிலருடன் நரிக்குறவா் காலனியில் வந்து ஷீலா தகராறில் ஈடுபட்டாராம்.

இது குறித்து, கடம்பத்தூா் காவல் நிலையம், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

எனவே, இது குறித்து நடவடிக்கை எடுப்பதுடன், நரிக்குறவா்கள்டியிருக்கும் பகுதியில் காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபடவும், கண்காணிப்பு கேமரா பொருத்தி அசம்பாவித சம்பவத்தை தடுக்கவும், பாதுகாப்பு வழங்கவும் வேண்டும் என தெரிவித்தனா்.

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக கா்நாடக மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்து, 4 கிலோ கஞ்சா, கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆந்திரம், கா்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் இருந்... மேலும் பார்க்க

ஏரியில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருத்தணி அருகே காசிநாதபுரம் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டாபிராமபுரம் ஊராட்ச... மேலும் பார்க்க

சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி

சோழவரம், காரணோடை பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை மேம்பாடு, சாலையோர மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சோழவரம் பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து செங்காளம்மன் கோயில், சோழ... மேலும் பார்க்க

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்க... மேலும் பார்க்க