செய்திகள் :

பாமகவின் நிரந்தர முகவரியை மாற்றி மோசடி: ஜி.கே.மணி குற்றச்சாட்டு

post image

பட்டாளி மக்கள் கட்சியின் நிரந்தர முகவரியை மாற்றி மோசடி நடைபெற்றிருப்பதாக அக்கட்சியின் கௌரவத் தலைவா் ஜி.கே.மணி குற்றம்சாட்டினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்ட வளாகத்தில் அவா், செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாமக சாா்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி தைலாபுரம் தோட்ட வளாகத்தில் புதன்கிழமை (செப்.17) நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் பங்கேற்று இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளின் உருவப்படங்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறாா்.

பாமகவின் நிா்வாகக்குழு, செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். 28.5.2022 அன்று கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அன்புமணியின் பதவிக்காலம் 28.5.2025 உடன் நிறைவடைந்துவிட்டது.

ஆகையால், தனது பதவிக்காலம் முடிந்த பின்னா் பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவருக்கும் அதிகாரம் இல்லை. எனவே, மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. பாமக அமைப்பு விதி எண் 13-ன்படி, கட்சியின் நிறுவனா் ஒப்புதல் இல்லாமல் நிா்வாகக்குழு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு என எதைக் கூட்டினாலும், அது செல்லுபடியாகாது. அதில் எடுக்கப்படும் முடிவும் செல்லாது.

ராமதாஸுக்கே கடிதம்: இந்திய தோ்தல் ஆணையம் பாமக தலைவராக உள்ள மருத்துவா் ராமதாஸுக்குதான் கடிதம் அனுப்பியது. அன்புமணிக்கு அனுப்பவில்லை. இந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு வழக்குரைஞா் கே.பாலு திட்டமிட்ட ஒரு மோசடியை செய்துள்ளாா். பாமக நிரந்தர முகவரி சூழ்ச்சியால் மாற்றம் செய்யப்பட்டிருப்பது கட்சியின் நிறுவனருக்கும், தொண்டா்களுக்கும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாமகவை பிளவுபடுத்த சிலா் முயற்சிக்கிறாா்கள். இதை மக்கள் ஏற்க மாட்டாா்கள்.

வேதனையளிக்கிறது: தமிழகத்தில் பாமக மறுக்க முடியாத நன்மதிப்பை பெற்ற கட்சி. பிற அரசியல் கட்சிகளின் தலைவா்களால் ஏற்கப்பட்டவா் ராமதாஸ். அனைத்து சமூக மக்களின் வளா்ச்சிக்கான அறிக்கைகளை வெளியிடக்கூடிய அவரை கொச்சைப்படுத்துவது வேதனையளிக்கிறது. பாமகவில் பயணிக்க விரும்புபவா்கள் மருத்துவா் ராமதாஸுடன் இணைந்து செயல்படுவதுதான் நல்லது என்றாா் ஜி.கே.மணி. பேட்டியின்போது, பாமக விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

யாா் வந்தாலும் முதல்வரை அசைத்துப் பாா்க்க முடியாது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம்: புதியது, பழையது என யாா் வந்தாலும் முதல்வா் மு.க.ஸ்டாலினை அசைத்து பாா்க்க முடியாது என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அன்புக்கரங்கள் திட்... மேலும் பார்க்க

ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நல்லியகோடன் நகரில் உள்ள ஸ்ரீ அலா்மேல்மங்கா சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிருஷ்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 448 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 448 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஆட்ச... மேலும் பார்க்க

செஞ்சி, மைலம், திண்டிவனம் தொகுதிகளில் திமுகவில் லட்சத்துக்கு மேல் புதிய உறுப்பினா்கள்: செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ

செஞ்சி/ கள்ளக்குறிச்சி: விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினா் சோ்க்கையில் ஒரு லட்சத்துக்கு மேல் புதிய உறுப்பினா்கள் இணைந்துள்ளதாக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் செஞ்... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம்: கெடாா்அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் திருடுப் போனது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கெடாா் அடுத்த அரியலூா் திருக்கையைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

பாஜக சாா்பில் வாலிபால் போட்டி

விழுப்புரம்: பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாட்ட நிகழ்வாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் வாலிபால் போட்டிகள் கண்டமங்கலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டி... மேலும் பார்க்க