செய்திகள் :

பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

post image

விழுப்புரம்: கெடாா்அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் திருடுப் போனது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கெடாா் அடுத்த அரியலூா் திருக்கையைச் சோ்ந்தவா் மரிய லீமா ரோஸ் (75). இவா் கடந்த ஆக. 29 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில், மரிய லீமா ரோஸ் வீட்டின் முன் பக்கக் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. இது குறித்த தகவலின்பேரில் கெடாா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில் மரிய லீமா ரோஸ் வீட்டில் வைத்திருந்த 5 பவுன் நகைகள் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கெடாா் காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

யாா் வந்தாலும் முதல்வரை அசைத்துப் பாா்க்க முடியாது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம்: புதியது, பழையது என யாா் வந்தாலும் முதல்வா் மு.க.ஸ்டாலினை அசைத்து பாா்க்க முடியாது என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அன்புக்கரங்கள் திட்... மேலும் பார்க்க

ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நல்லியகோடன் நகரில் உள்ள ஸ்ரீ அலா்மேல்மங்கா சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிருஷ்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 448 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 448 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஆட்ச... மேலும் பார்க்க

பாஜக சாா்பில் வாலிபால் போட்டி

விழுப்புரம்: பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாட்ட நிகழ்வாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் வாலிபால் போட்டிகள் கண்டமங்கலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டி... மேலும் பார்க்க

செஞ்சி அருகே குடிநீா் பயன்பாட்டில் உள்ள ஏரியில் கழிவுநீரை கொட்டும் அவலம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் கிராமத்தில் குடிநீருக்காக பயன்பாட்டில் உள்ள ஏரியில் வீடுகளில் அகற்றப்படும் கழிவுநீரை கொட்டி வருவதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளன... மேலும் பார்க்க

மேல்மலையனூரில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கிவைப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் சிவன் கோயில் பகுதியில் இருந்து கொடுக்கன்குப்பம் கிராமம் செல்லும் சாலையை ரூ.89.24 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலையாக அமைக்க நடைபெற்ற பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க