செய்திகள் :

பாமக: `ராமதாஸ் வீட்டில் இல்லாத சமயத்தில் தைலாபுரம் வந்திருக்கும் அன்புமணி' - காரணம் என்ன?

post image

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. 10 நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்றிருந்த அன்புமணி சென்னை திரும்பினார். இந்த நிலையில், பா.ம.க நிர்வாகக் குழுக் கூட்டம் தைலாபுரத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. அப்போது நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. எனினும் பின்னர் முழுமையான பட்டியல் அது அல்ல என்றும் சொல்லப்பட்டது.

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டது. இதையடுத்து திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. இதில், அன்புமணியை விமர்சித்து சிலர் பேசினர். மேலும், பா.ம.க-வில் கூட்டணி உட்பட அனைத்து நிலையிலும் முடிவெடுக்கும் அதிகாரம், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸூக்கு முழு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்கிடையே, அன்புமணி வகித்து வந்த பா.ம.க தலைவர் பதவிக்காலம் கடந்த மே 28-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து பா.ம.க சட்ட விதிகளின்படி தலைவராக ராமதாஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த செய்தியை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பா.ம.க முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறது. மேலும், ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியின் பதவியிலிருந்து நீக்கி வருகிறார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இந்த நிலையில், இன்று மயிலாடுதுறையில் நடக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்கு ராமதாஸ் சென்றிருக்கிறார். ராமதாஸ் வீட்டில் இல்லாத நேரதத்தில் அன்புமணி, தைலாபுரம் தோட்டத்தில் இருக்கும் ராமதாஸ் வீட்டுக்கு வந்திருக்கிறார். ஈசிஆரில் நடந்த திருமண நிகழச்சிக்கு சென்றிருந்த நிலையில், அப்படியே தன் அம்மாவை பார்ப்பதற்கு தைலாபுரம் வந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

"வட இந்திய கட்சி என கிண்டலடிக்கிறார்கள்; தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போகிறோம்!" - கேரளாவில் அமித் ஷா

கேரள மாநில பா.ஜ.க சார்பில் திருவனந்தபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்துவைத்தார். பின்னர் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில்... மேலும் பார்க்க

லாக்கப் டெத் - குடும்பங்களை சந்திக்கும் விஜய்! - ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைக்க திட்டம்?

'லாக்கப் மரணங்கள்!'கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறையினரின் கொடுமையால் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து பேசவிருக்கிறார்.விஜய்சிவகங்கை மடப்புரத்தில் அஜித் குமார் என்கிற இளைஞர் காவல்து... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்

அகமதாபாத் விமான விபத்து குறித்து முதல்கட்ட அறிக்கை வெளியாகி உள்ளது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு கூறியதாவது..."இப்போதே எந்த முடிவிற்கும் வந்துவிட வேண்டா... மேலும் பார்க்க

ADMK: "அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்" - அமித் ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!

'அமித் ஷா பேட்டி'மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும். அந்த ஆட்சியில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் எனக் கூறியிருந... மேலும் பார்க்க

பாஜக: "திமுக கூட்டணி சுக்குநூறாக உடையும்; அமித்ஷா சொன்னதே எங்களுக்கு வேத வாக்கு" - எல்.முருகன்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கே... மேலும் பார்க்க

Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ளிகளில் சேர்ப்பு

சீனா நாட்டின் அதிகாரத்தின் கீழ் திபெத் இருந்து வருகிறது.அதன் பிடியிலிருந்து வெளியேற திபெத் முயன்று வருகிறது... போராடி வருகிறது.இந்த நிலையில், திபெத்தியன் ஆக்‌ஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது... மேலும் பார்க்க