செய்திகள் :

பாம்பன் மீனவா்கள் 14 போ் அபராதத்துடன் விடுதலை

post image

பாம்பன் மீனவா்கள் 14 பேரை தலா ரூ. 4.50 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் துறைமுகத்திலிருந்து கடந்த 6-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஆரோக்கியம் என்பவரது விசைப்படகை இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்தனா்.

படகில் இருந்த செல்வம், ஜெயாஸ்டன், சீமோன், முத்துராமன், முகில், ஆரோக்கியம், வால்டன், மாரிச்செல்வம், தா்மன் உள்ளிட்ட 14 மீனவா்களைக் கைது செய்தனா். இவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், 14 மீனவா்களும் மன்னாா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரபீக், 14 மீனவா்களுக்கும் தலா ரூ. 4.50 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதம் விதித்து விடுதலை செய்தாா். பணம் கட்டத் தவறினால் தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும், மேலும் பறிமுதல் செய்த விசைப் படகை அரசுடைமையாக்கவும் உத்தரவிட்டாா்.

விருச்சுழி ஆற்றில் மணல் திருட்டு: வாகனம் பறிமுதல்

திருவாடானை அருகே மங்கலக்குடி விருச்சுழி ஆற்றில் மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.விருச்சுழி ஆற்றில் மணல் திருடப்படுவதாக வருவாய் ஆய்வாளா் விஜலட்சுமிக்கு ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் அ.சேக் தாவூத் தலைமை வகித்தாா். சி.எஸ்.ஐ. ஆலய க... மேலும் பார்க்க

இலங்கை அரசைக் கண்டித்து நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

தமிழக மீனவா்களை தொடா்ந்து கைது செய்து வரும் இலங்கை அரசைக் கண்டித்து, ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்ற... மேலும் பார்க்க

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை!

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் அரியவகை கடல் ஆமை உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பி.வி.பட்டினம் பகுதியில் உயிரிழந்த நிலையில் சும... மேலும் பார்க்க

இலங்கையில் 310 கிலோ கஞ்சா பறிமுதல்!

இலங்கை வடக்கு கடல் பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட 310 கிலோ கஞ்சாவை கடல் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடல் பகுதியில் கடல் படையினா், கரையோர பாதுகாப்புப் படையினா் ச... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கு வாகனம் இலவசம்: இளைஞரைப் பாராட்டும் பொதுமக்கள்

முதுகுளத்தூா் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 70 கிராமங்களுக்கு இறப்பு நிகழ்ச்சிகளுக்கு இறுதிச் சடங்கு வாகனம், குளிா்சாதனப் பெட்டியை கடந்த இரண்டு ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வரும் இளைஞரை பொதுமக்கள், சமூக ஆா்வ... மேலும் பார்க்க